என் மலர்
நீங்கள் தேடியது "independent candidate"
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேட்சை ஒருவர் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்? எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள்? எத்தனை வேட்பாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அந்த ஆய்வில் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் யார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் சர்மா என்பவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.ஆயிரத்து 100 கோடி என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.
சுயேட்சையாக பாடலி புத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக இவர் கணிசமான அளவுக்கு பணத்தை செலவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே 2-வது பெரிய பணக்கார வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செவல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உள்ளார்.
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.
அந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்? எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள்? எத்தனை வேட்பாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அந்த ஆய்வில் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் யார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் சர்மா என்பவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.ஆயிரத்து 100 கோடி என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.
சுயேட்சையாக பாடலி புத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக இவர் கணிசமான அளவுக்கு பணத்தை செலவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே 2-வது பெரிய பணக்கார வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செவல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரது சொத்து மதிப்பு 895 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நகுல்நாத் 3-வது பணக்கார வேட்பாளர் ஆவார். இவரது சொத்து ரூ.660 கோடியாகும்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஒருவர் தனது டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார். #KuppaljiDevadoss #independentcandidate #ChennaiSouth #electiondeposit #depositincoins
சென்னை:
ஒவ்வொரு தேர்தலின்போதும் சில சுயேட்சை வேட்பாளர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்து ஊடகங்களின் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.
அவ்வகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஒருவர் தனது டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கட்டினார்.

குப்பல்ஜி தேவதாஸ் என்னும் அந்த வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். #KuppaljiDevadoss #independentcandidate #ChennaiSouth #electiondeposit #depositincoins
மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
பெங்களூரு:

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.
அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.
வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.
நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.
அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.
இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மாண்டியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் மாண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.
அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.
வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.
நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.
அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.
இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
பாகிஸ்தானில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #PakistanPolls
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் மாகாணத்துக்கான சட்டசபை தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்நாட்டின் முக்கிய கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், முன்பு எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் என்.ஏ-103 என்ற பாராளுமன்ற தொகுதி மற்றும் பி.பி 103 என்ற பஞ்சாப் மாகாணத்தின் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மிர்ஷா முகமது அகமது முகல் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மிர்ஷா முகமது அகமது முகல் போட்டியிட்ட என்.ஏ-103 மற்றும் பி.பி 103 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanPolls
பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் மாகாணத்துக்கான சட்டசபை தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்நாட்டின் முக்கிய கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், முன்பு எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் என்.ஏ-103 என்ற பாராளுமன்ற தொகுதி மற்றும் பி.பி 103 என்ற பஞ்சாப் மாகாணத்தின் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மிர்ஷா முகமது அகமது முகல் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மிர்ஷா முகமது அகமது முகல் போட்டியிட்ட என்.ஏ-103 மற்றும் பி.பி 103 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanPolls