search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republican Party"

    • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
    • டிரம்பிற்கு போட்டியிட உள்ள உரிமையை பறிப்பது அமெரிக்க குணம் அல்ல என்றார் ராபர்ட்

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால், கடந்த 2020ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட தனது ஆதரவாளர்களை அனுப்பி தேச துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பெயரை வாக்கு சீட்டிலிருந்து நீக்கவும், அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    டிரம்பை தீவிரமாக எதிர்த்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில், ஜூனியர் கென்னடி.

    டொனால்ட் டிரம்பிற்கு தடை விதிக்கப்படுவது குறித்து ஜூனியர் கென்னடியிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் டிரம்பின் ஆதரவாளனோ ரசிகனோ இல்லை. அதனால்தான் அவரை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குகிறேன்.

    ஆனால், அவரை சமநிலையற்ற ஆடுகளத்தில் வெல்ல விரும்பவில்லை.

    அமெரிக்க மக்களுக்கு ஒரு நேர்மையான தேர்தலை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. பல விவாதங்கள் நடைபெற்று, மக்கள் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஒருவரை தேர்ந்தெடுக்கும் நியாயமான ஜனநாயகத்தை கோர அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

    ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எந்த ஆதாரமுமில்லாமல் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுவது பெரும் தவறு. நம் நாட்டை ஒரு அறிவில்லாதவர்களின் நாடு போல் உலக அரங்கில் காட்டி விடும்.

    குறுகிய பார்வை கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டால், டிரம்ப் ஒரு கடவுளை போல் கொண்டாடப்படுபவர் ஆகி விடுவார்.

    இது அமெரிக்கர்கள் எடுக்கும் முடிவே அல்ல.

    இது தவறான திசையில் பயணிக்கும் முடிவு. மேலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கென்னடி ஜூனியர் கூறினார்.

    1961ல் அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவியேற்ற ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy), 1963ல் டெக்ஸாஸ் (Texas) மாநில டல்லாஸ் (Dallas) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    பிறகு 1968ல், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் கென்னடியின் சகோதரர், ராபர்ட் எஃப். கென்னடி, கலிபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    அந்த ராபர்ட் கென்னடியின் மகன்தான் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் (Robert F. Kennedy, Jr.) என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
    • பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
    • விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:

    ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.

    இவ்வாறு விவேக் கூறினார்.

    2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.

    இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.

    • இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
    • தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) தமிழ்நாடு பிரிவின் தமிழ்மாநில அவைத் தலைவரும், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர்.கே.நடராஜ் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) மாநிலத் தலைவர் டாக்டர்.ஆர்.வெங்கடேசன், இந்திய குடியரசு கட்சி (எம்.சி.ஆர்) மாநிலத் தலைவர் எம்.சி.ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

    இந்த தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை ரத்து செய்து மீதமுள்ள காலி நிலத்தில் அனைத்து சமூக பயனாளிகளுக்கும் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி முழக்கமிட்டனர்.

    இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) சேலம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், சேலம் மாநகரத் தலைவர் ராஜபிரசாத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ரங்கசாமி, இந்திய குடியரசு கட்சி (எம்சிஆர்) சேலம் மாவட்ட தலைவர் பாலசுப்ர மணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    ×