என் மலர்
செய்திகள்

அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அரசு அதிகாரிகளை சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்- காங்கிரஸ்
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அரசு அதிகாரிகளை சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.

அதன்மூலம் பா.ஜனதா கட்சியினரின் விழா ஏற்பாடுகள் செய்யும் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கி விரையமாக்கப்பட்டுள்ளது. மேலும் வசுந்தராவின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை அவர் நிறைவேற்றி வருகிறார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அரசின் செயல்பாடு ‘ஜீரோ’ ஆக உள்ளது.
அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் கொட்டப்பட்டன. அதற்காக ரூ.21 கோடி செலவிடப்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதேசன் சேத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று பல அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.

அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் கொட்டப்பட்டன. அதற்காக ரூ.21 கோடி செலவிடப்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதேசன் சேத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று பல அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
Next Story






