என் மலர்
நீங்கள் தேடியது "museum"
- உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது.
- 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
கெய்ரோ:
எகிப்தில் உலகின் மிகப்பெரிய மியூசியம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய பிரமிட் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தின் எத்தகைய கலாசார அடையாளங்களை அருங்காட்சியகம் கொண்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதே இதன் நோக்கம்.
உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எகிப்திய மன்னர் டுட்டன்காமுனின் கல்லறை. இந்தக் கல்லறை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மியூசியம் அக்டோபர் 2024-ல் பொதுமக்களுக்கு ஓரளவு திறக்கப்பட்டது.
பிரமாண்ட சிலைகள், பழங்கால கல்லறைகளுடன் வரிசையாக அமைந்துள்ள 6 மாடி படிக்கட்டைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள பிரமிடுகளின் காட்சியுடன் கூடிய பரந்த சாளரத்திற்கு வழிவகுக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ரோமானிய சகாப்தம் வரையிலான 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பட்டறைகளுக்கு திறந்திருக்கும் சேமிப்பு பகுதிகளும் இந்த வளாகத்தில் அடங்கும்.
நவம்பர் 4-ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த மியூசியத்தை பார்வையிடலாம்.
- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
- அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு நேருவின் முக்கியமான கடிதங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் திரும்பப் பெற்றனர். அருங்காட்சியக இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகு 51 அட்டைப் பெட்டிகளில் நேருவின் ஆவணங்கள் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்டது.
அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. அந்தக் கடிதங்களை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தியிடம் இருந்து பிரதமர் நேருவின் கடிதங்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
- தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
ஒரு பார்வையாளர் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வந்தபோது, வாகன நிறுத்துமிடக் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், பார்வையாளர் ஒரு அலுவலக அறையில் பூட்டப்பட்டு ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு கும்பல் அருங்காட்சியக வளாகத்திற்குள் புகுந்து அதன் அரங்கத்தை சூறையாடியதுடன், இயக்குநரையும் தாக்கியது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். இந்த மாளிகை இப்போது அவரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார பாரம்பரிய தளமாகவும், அருங்காட்சியகமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
- தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றலாபயணிகள் இங்கு உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் அருகே கடல்சார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அங்குள்ள பழங்காலத்து நங்கூரம், மிதவை விளக்கு, கப்பல் மாலுமி தளம், பைனாகுலர், உள்ளிட்ட கடல்சார் அறிவியல் கருவிகள் விபரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆவலுடன் பார்த்து வந்தனர்.
இது அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று நினைத்து செல்லும் போது அதன் கதவுகள் மூடப்பட்டு கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே கடல்சார் அருங்காட்சியத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.
- ரூ .1 கோடி மதிப்பீட்டில் “அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைப்பு.
சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.
மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்!
அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
- பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.
சுவாமிமலை:
சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.
இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.
பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்து எடுத்து கூறி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் 3 தலைமுறைகளாக பழமையான பொருட்களை சேகரித்தும் 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து கொடைக்கானலை சேர்ந்த ஜோஸ்வா, அவரது மகன் கேலப் ஆகியோர் அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளிட்ட பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான மனிதர்கள் அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை பார்க்க முடிகிறது.இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 3 தலைமுறைகளாக அரிதான மற்றும் பழமையான பொருட்களை சேகரித்து வருகின்றனர். தனது தாத்தா காலத்தில் ஆரம்பித்து அவரது மகன் 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து தற்போது 3-ம் தலைமுறையாக இருக்கக்கூடிய 3 வயது சிறுவன் உட்பட இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.
குறிப்பாக இவர்கள் வீட்டையே அருங்காட்சியகம் போல் பழமையான பொருட்களை வைத்து நிரப்பி உள்ளனர். எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பு நீண்டு வருகிறது. பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.
இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய 2000 வகைகளுக்கும் மேலாக உள்ள பறவைகளின் இறகுகளும் உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும் பழங்காலத்தில் கணக்கு எழுதிய ஓலைச்சுவடிகள் உலகில் அழிந்து போன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு முந்தைய கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் வரை இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.
தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் புத்தகங்கள், பழைய பொருட்களோடு நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த சேகரிப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர். ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது. எனவே பழமையான பொருட்களை பாதுகாக்கும் இவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
- தஞ்ைச சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.
தஞ்சாவூர்:
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவர் தலைமையில் 1896-1900 கால கட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.
இந்தோ - சாராசனிக் கட்டிடக்கலை அம்சத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தான் கடந்த 115 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது .
இதையடுத்து பழமை வாய்ந்த பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்ப ட்டுள்ளது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்ததால் அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தில் 7டி தியேட்டர், அரிய வகை பறவைகள் பூங்கா, இசைக்கு ஏற்றபடி நடனமாடும் செயற்கை நீரூற்று, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, பழங்கால சிற்பங்கள் காட்சியறை, நில அளவீட்டு துறை காட்சியறை உள்பட பல்வேறு காட்சிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் மற்றும் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் வெளியே தரை தளம் முழுவதும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை பூச்சுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
அந்தந்த அரசுத்துறைகள் சார்பிலும் பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி அருங்காட்சியகம் முழுவதும் அரிய வகை பொக்கிஷங்களால் நிரம்பி உள்ளது. அருங்காட்சியத்துக்கு வரும் மாணவ -மாணவிகள் மிகவும் பயன்பெறுவார்கள். பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இது தவிர தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அருங்காட்சியகத்தை பார்வையிடுவர். இதன் மூலம் தஞ்சை நகரில் பெரிய கோவில், மணிமண்டபம், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியக திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் , மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் சிங்காரவேலு,ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
- எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி இலக்கியத் திருவிழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே இலக்கிய திருவிழா நடந்து முடிந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்ககியது. இன்று வரை இந்த விழா நடைபெறுகிறது.
இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30-க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளித்தனர்.
இத்திருவிழாவினை பற்றி விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் நடவடிக்கையால் ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
- கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.
மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.
அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது.
- தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
தஞ்சை நகரின் மையப் பகுதியில் இருக்கும் பழமையான பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார்.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது. கலெக்டர் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றது.
கடந்த ஜனவரி மாதம் இந்த அருங்காட்சியகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இதில், வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த செயற்கை முறையில் தத்ரூபமான காட்சிகள், அரியவகை பறவைகள் பூங்கா 7டி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் கூடுதல் அம்சமாக குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்த ரெயில் சேவையை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
இன்னும் சில நாட்களில் பள்ளி தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரவுள்ளது.
தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்துக்கு வருவர். தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
- பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும்.
- நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் பேசிபொருளாகி இருக்கிறது. மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் காட்சிக்கு வைத்திருந்த வாழைப்பழம் அருங்காட்சியக சுவற்றில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது.
காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி காரணமாக பழத்தை சாப்பிட்டேன் என்று தென் கொரிய மாணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். நோ ஹூன் சூ என்ற மாணவர் வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு, பின் அதன் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டுகிறார். இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது. அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார்.
"நவீன கலையை சேதப்படுத்துவதும் ஒருவிதமான கலை தான்," என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நோ ஹூன் சூ தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினம், காலை உணவை எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட பசி காரணமாகத் தான் இவ்வாறு செய்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.






