search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Museum"

    • இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சி யகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நெல்லை:

    பாளையில் தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை சார்பில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது.

    புலிகளைக் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 4 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மற்றும் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் நாளை ( சனிக்கிழமை) களக்காடு தலையணைக்கு சூழல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி செய்திருந்தார்.

    • முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டி ருந்தார்.

    அடிக்கல் நாட்டுவிழா

    இதையடுத்து முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிகள் நிறைவடைந்து தற்போது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆராய்ச்சியாளர்கள் தகவல்

    இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் கிஷோர் பாஷா, கூடுதல் தலைமை இயக்குநர் குருமீட் சாவ்லா, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    அதில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தகவலை தெரிவித்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனுமதி அளித்துள்ளார். இந்த தகவலை ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    முதுமக்கள் தாழிகள்

    இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் கண்ணாடியின் மேல் இருந்த படியே உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முக்கியமான ஆய்வாளர்கள் அதிகாரிகள் வரும்போது கீழே இறங்கி சென்று பார்க்கும் வண்ணம் இந்த இடத்தில் இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 5-ந் தேதி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற உள்ளதாகவும், முதலில் சி சைட்டிலும், பின்னர் பி சைட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.

    இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.

    ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    இதை மேலும் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்பட்டு, முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன், டி. கே. ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தாசில்தார் சக்திவேல், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் முத்துக்குமார், தஞ்சாவூர் அரசு அருங்கா ட்சியம் காப்பாட்சியர் (பொ) சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளவைகள் குறித்து கலெக்டர் எடுத்து கூறினார்.
    • தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    நில அளவீட்டு துறை காட்சியறை, கைவினைப் பொருட்கள் காட்சியறை, ராஜாளி பூங்கா உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார். அவருக்கு அருங்காட்சி யகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    மேலும் அருங்காட்சி யத்தை தினமும் வரும் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் எண்ணிக்கை குறித்தும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம், தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி மேலாண் இயக்குனர் கீதா, துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், அருங்காட்சியக நிர்வாக அலுவலர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் மணிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமை ச்சரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    மேலும், மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுற்றுலா துறை ஆணையா் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், சுற்றுலா அலுவலா் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • கேன்டீன் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
    • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் நடவடிக்கையின் பேரில் தலையணையில் வனத்துறை சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டது.

    அருங்காட்சியகம்

    இங்கு ஐஸ்கிரீம், டீ, காப்பி, குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகளும் குளித்து விட்டு, உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். கேண்டீனில் விற்பனையும் அதிகரித்து வந்தது.

    அதுபோல அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது. இதில் வனவிலங்குகளின் மாதிரிகள், அவைகளின் சத்தம் எழுப்பும் கருவிகள், பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து இன்புற்றனர்.

    மீண்டும் திறக்க வலியுறுத்தல்

    இதனிடையே கொரோனா தடை உத்தரவால் கடந்த 2018-ம் ஆண்டு கேன்டீனும், அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக இதுவரை கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைவதுடன், கட்டிடமும் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.

    எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.
    • அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    நெல்லை:

    தமிகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழாய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட அரும்பொருட்கள் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த அரும் பொருட்களை மக்கள் பார்வையிட்டு, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொல்லியல் துறை அதிகாரிகள் சார்பில் நடந்த இடம் தேர்வு பணியில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லையின் அடையாளமாகவும், தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலும் அங்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனையொட்டி ரெட்டியார்பட்டியில் நடந்த அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ரெட்டியார்பட்டி மலை பகுதியில் மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். 55 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் ரூ.33 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இங்கு அகழாய்வு மூலம் கிடைத்த அரும்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    கொற்கை அகழாய்வில் கிடைத்த 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் கிடைத்த 1,620 பொருட்கள், சிவகளையில் கிடைத்த 185 பொருட்கள் என 2,617 பொருட்கள், 106 முதுமக்கள் தாழிகள் ஆகியவை பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட உள்ளது. மேலும் அந்த 3 இடங்களிலும் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

    அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலா தலமாகவும் பயன்படுத்தும் வகையில் இதன் அருகில் உள்ள உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும்.

    மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

    • அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
    • சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாள சின்னமாக மாற்றப்படும்.

    நாகப்பட்டினம்:

    கீழடியில் அகழாய்வு செய்து தமிழர் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர், நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்னதாக அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வரவேற்றார்.நாகப்பட்டினம் துறைமுக நகரத்தின் வரலாற்று பண்பாட்டுத் தடங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஆய்வுப் பயணம் அமைந்துள்ளது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

    நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பது, சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாளச் சின்னமாக மாற்றி, கீழடி போல் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆய்வுப் பயணம் வலுசேர்க்கும் என்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    • பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும்.
    • நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் பேசிபொருளாகி இருக்கிறது. மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் காட்சிக்கு வைத்திருந்த வாழைப்பழம் அருங்காட்சியக சுவற்றில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது.

    காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி காரணமாக பழத்தை சாப்பிட்டேன் என்று தென் கொரிய மாணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். நோ ஹூன் சூ என்ற மாணவர் வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு, பின் அதன் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டுகிறார். இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது. அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார்.

    "நவீன கலையை சேதப்படுத்துவதும் ஒருவிதமான கலை தான்," என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நோ ஹூன் சூ தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினம், காலை உணவை எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட பசி காரணமாகத் தான் இவ்வாறு செய்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது.
    • தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் இருக்கும் பழமையான பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார்.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது. கலெக்டர் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றது.

    கடந்த ஜனவரி மாதம் இந்த அருங்காட்சியகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இதில், வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த செயற்கை முறையில் தத்ரூபமான காட்சிகள், அரியவகை பறவைகள் பூங்கா 7டி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் கூடுதல் அம்சமாக குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் சேவையை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இன்னும் சில நாட்களில் பள்ளி தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரவுள்ளது.

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்துக்கு வருவர். தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம்  வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குஹோமி ஜகாங்கீர் பாபா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. 

    அதில் முதல் இடத்தை அத்தியூத்து அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹஸன் அலியும், 2-வது இடத்தை ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி மற்றும் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி லேகா ஸ்ரீ, 3-வது இடத்தை முதலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயமாலினி ஆகியோர் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ - ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர் தனசேகர், விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரீத்தி ஜிந்தா, 3-ம் இடத்தை சித்தார்கோட்டை முகம்மதிய மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைத்தனர்.


    ×