என் மலர்
நீங்கள் தேடியது "மியூசியம்"
- உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது.
- 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
கெய்ரோ:
எகிப்தில் உலகின் மிகப்பெரிய மியூசியம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெரிய பிரமிட் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தின் எத்தகைய கலாசார அடையாளங்களை அருங்காட்சியகம் கொண்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதே இதன் நோக்கம்.
உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எகிப்திய மன்னர் டுட்டன்காமுனின் கல்லறை. இந்தக் கல்லறை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மியூசியம் அக்டோபர் 2024-ல் பொதுமக்களுக்கு ஓரளவு திறக்கப்பட்டது.
பிரமாண்ட சிலைகள், பழங்கால கல்லறைகளுடன் வரிசையாக அமைந்துள்ள 6 மாடி படிக்கட்டைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இது அருகிலுள்ள பிரமிடுகளின் காட்சியுடன் கூடிய பரந்த சாளரத்திற்கு வழிவகுக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ரோமானிய சகாப்தம் வரையிலான 5,000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பட்டறைகளுக்கு திறந்திருக்கும் சேமிப்பு பகுதிகளும் இந்த வளாகத்தில் அடங்கும்.
நவம்பர் 4-ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த மியூசியத்தை பார்வையிடலாம்.
மணிப்பூர், தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பழங்குடியினர் நல விவகார அமைச்சகம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
இந்தியாவின் சுதந்திரத்தில் பழங்குடியின மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் நகர்ப்புற மக்களுக்குத் தெரியாது. அதனால்தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற அருங்காட்சியகங்களை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதில், ரூ.110 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம், நமது சமூகத்தை ஒருங்கிணைக்க உதவும்.
குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் கட்டப்படும். இது தேசபக்தியை வளர்க்கும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள்.. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு






