search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம்
    X
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டி

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம்  வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குஹோமி ஜகாங்கீர் பாபா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. 

    அதில் முதல் இடத்தை அத்தியூத்து அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹஸன் அலியும், 2-வது இடத்தை ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி மற்றும் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி லேகா ஸ்ரீ, 3-வது இடத்தை முதலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயமாலினி ஆகியோர் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ - ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது இதில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர் தனசேகர், விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரீத்தி ஜிந்தா, 3-ம் இடத்தை சித்தார்கோட்டை முகம்மதிய மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளிக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைத்தனர்.


    Next Story
    ×