search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 States Election"

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
    • அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-

    நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.

    ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

    நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
    • தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், அசோக் கெலாட்டிற்கு இது சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவிற்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநில பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் தினேஷ் கோதானியா மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியதுடன், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனை அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே FEMA வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    • 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது
    • முதற்கட்டாக அறிவித்ததில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் மாற்றப்பட்டுள்ளது

    மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், நேற்றிரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெட்டல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    துணை பெண் கலெக்டரான நிஷா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு இன்னும் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

    முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
    • தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்

    ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி, மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, துரிதமாக வேலை செய்து வருகிறது.

    அதேவேளையில், பா.ஜனதாவும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறிமாறி வந்துள்ளது. இதனால் பா.ஜனதா இந்த முறை தங்களுக்குதான் வாய்ப்பு என்ற முறையில் வேலை செய்து வருகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் ராஜஸ்தான் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ''சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, உயர்வு போன்ற அம்சங்களில் காங்கிரசின் நல்லாட்சியால் ராஜஸ்தான் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.

    • ஐந்து மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது
    • ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பதவிக் காலங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைய இருக்கின்றன.

    இதனால் டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியது. ஐந்து மாநிலங்களுக்கும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, தேர்தல் நடத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், இன்று மதியம் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை வெளியிடுவார்.

    ராஜஸ்தானில் காங்கிரசும், மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும் என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. #5StatesElection #BJP #Congress
    புதுடெல்லி :

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15-ம் தேதியும் நிறைவடைகிறது.

    மேலும், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

    இதனிடையே, நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெரும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதனடிப்படையில்,  200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு  2 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது

    ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது, இங்கு காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் வெற்றி பெற்றால் அது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.

    சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது, இங்கு உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெரும் எனவும் மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று மாநிலங்களில் ராஜஸ்தானை தவிற மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஒருவேலை இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியின் செல்வாக்கு மீது கேள்வி எழுப்பட்டு அது அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



    அதேசமயம், பணமதிப்பிழப்பு, தினம்தினம் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை பாஜகவின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்து கணிப்பு சொலிகிறது. அதனால், இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. #5StatesElection #BJP #Congress
    ×