என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edapadi palanisamy"

    • மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
    • மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.

    மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!

    மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.

    மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.

    மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
    • முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.

    காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.

    முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?

    ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.

    சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.

    சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.

    ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.

    நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.

    திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.
    • இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.

    கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.

    சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது. அவருக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாருவதும்தான்.

    இஸ்லாமியர்களை காக்கக்கூடிய காவல் அரணாக திமுக ஆட்சி இருப்பதால்தான் தமிழ்நாட்டில் உணவு அரசியல், கும்பல் வன்முறை தலை எடுக்காமல் இருக்கிறது.

    2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.

    இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.

    அதிமுக ஆதரவால்தான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.
    • 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எஸ்ஐஆர் மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற் வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். மாநிலம் முழுவதும் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வருகிறது.

    தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெற கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக புகார் எழுகிறது.

    எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி செய்ய அப்பணிகளில் ஈடுபடும் மாநில அரசு அலுவலர்களுக்கு மாநில அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களை மாநில அரசு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இறந்த, போலி வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. போலி வாக்காளர்களை வைத்து கள்ளஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.
    • கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது என்றார் தினகரன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது.

    அனைத்துக் கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும்.

    கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.

    தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்.

    தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். அப்போது அந்தத் துறைக்கு தலைவராக இருந்த பழனிசாமி பொறுப்பேற்றாரா?

    கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. பழனிசாமி தலைமையை ஏற்று எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும்?

    தவெகவை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி. நாகரீகம் இல்லாமல் கூட்டணி குறித்து பேசுகிறார். இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருங்கள்.

    2026 தேர்தலில் 4 முனை போட்டி நடக்கும். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது. 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம் என தெரிவித்தார்.

    • நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
    • வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-

    செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
    • 'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்'.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்'' என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

    'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. சு.திரு நாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலை வர் காதர் மொய்தீன் ஆகி யோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
    • சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார். மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்.

    தென்காசி மாவட்டம் உதயமானது அ.தி.மு.க. ஆட்சியில். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முடிவடைந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சில திட்டங்களை தி.மு.க. கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

    மக்கள் ஏமாற்றம்

    சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அரசு கலை கல்லூரி, ஆட்டின ஆராய்ச்சி மையம், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், ரூ. 543 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டனர். மக்களை ஏமாற்றியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. அனைத்து குடும்பத் தலைவி க்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றார்கள். இதனை தி.மு.க.வினரை பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றனர்.

    40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடிந்ததா?. தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம். மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். யாருக்கும் அ.தி.மு.க. அஞ்சியதில்லை, அஞ்சப்போவதுமில்லை. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். கொள்ளையடிப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், தளவா ய்சுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், ஏ.கே. சீனி வாசன், மாவட்ட செயலா ளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.பி. சவுந்தர்ரா ஜன், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசைய ன்விளை பேரூராட்சி தலைவரு மான ஜான்சிராணி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா, முன்னாள் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளரும், முன்னாள் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவ ருமான பால்கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செந்தில்கு மார், பாசறை பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளசை தேவராஜ், நகர பேரவை செயலாளர் கவுந்தர் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி .ராமநாதன், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன், ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பாண்டியராஜ், நெல்லை 15-வது வட்டசெயலாளர் பாறை மணி, நெல்லை மேற்கு பகுதி பொருளாளர் காளி முருகன், இளைஞரணி விஷ்வகணேஷ், மூலைக்கரைப்பட்டி நகர துணைச்செயலாளர் எடுப்பல் காளிமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜாண்ரவி, ஆலங்குளம் பேரூர் துணைச்செயலாளரும், 12-வது வார்டு கவுன்சிலருமான சாலமோன்ராஜா, நெல்லை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், கருவந்தா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருன்மத்தேயு, புளியங்குடிநகர இளைஞரணி தலைவர் செல்வ சந்திரசேகரன், புளியங்குடி 1-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
    • அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினர்.

    இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக இன்று காலை பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நமது அண்டை நாடான இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற திரு. அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

    "கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    ×