search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edapadi palanisamy"

    • சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
    • சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார். மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்.

    தென்காசி மாவட்டம் உதயமானது அ.தி.மு.க. ஆட்சியில். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முடிவடைந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சில திட்டங்களை தி.மு.க. கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

    மக்கள் ஏமாற்றம்

    சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அரசு கலை கல்லூரி, ஆட்டின ஆராய்ச்சி மையம், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், ரூ. 543 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டனர். மக்களை ஏமாற்றியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. அனைத்து குடும்பத் தலைவி க்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றார்கள். இதனை தி.மு.க.வினரை பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றனர்.

    40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடிந்ததா?. தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம். மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். யாருக்கும் அ.தி.மு.க. அஞ்சியதில்லை, அஞ்சப்போவதுமில்லை. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். கொள்ளையடிப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், தளவா ய்சுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், ஏ.கே. சீனி வாசன், மாவட்ட செயலா ளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.பி. சவுந்தர்ரா ஜன், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசைய ன்விளை பேரூராட்சி தலைவரு மான ஜான்சிராணி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா, முன்னாள் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளரும், முன்னாள் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவ ருமான பால்கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செந்தில்கு மார், பாசறை பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளசை தேவராஜ், நகர பேரவை செயலாளர் கவுந்தர் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி .ராமநாதன், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன், ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பாண்டியராஜ், நெல்லை 15-வது வட்டசெயலாளர் பாறை மணி, நெல்லை மேற்கு பகுதி பொருளாளர் காளி முருகன், இளைஞரணி விஷ்வகணேஷ், மூலைக்கரைப்பட்டி நகர துணைச்செயலாளர் எடுப்பல் காளிமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜாண்ரவி, ஆலங்குளம் பேரூர் துணைச்செயலாளரும், 12-வது வார்டு கவுன்சிலருமான சாலமோன்ராஜா, நெல்லை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், கருவந்தா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருன்மத்தேயு, புளியங்குடிநகர இளைஞரணி தலைவர் செல்வ சந்திரசேகரன், புளியங்குடி 1-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

    சென்னை, கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

    பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை.

    இந்தநிலையில் அவர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் கொடுத்துள்ளார்.

    • திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

    ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது.

    இப்பொழுது, இந்த செயல்படாத, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது. ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் நாளை ( சனிக் கிழமை ) காலை திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

    மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வருகிறார்.
    • அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

    கோவை,

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகே யன் - கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் இன்று மதலை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வருகிறார். அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம். எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்த சாமி, தாமோதரன், கே.ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி மற்றும் அ.தி.முக பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    • பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கோவை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார்.

    கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அன்று மாலை வருகிறார்.

    பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு அன்றைய தினம் இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு இன்று கோவை-ஒசூர் ரோடு அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில், கோவைக்கு வருகை தரும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பகுதி செயலாளர்கள, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
    • எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை நேரில் சந்தத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அவருடன் எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    30 வயதிற்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். காவல்துறையில் புதிய பதவிகள் ரூ.13.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.



    அதன்படி, ரூ.44.71 லட்சம் செலவில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணினிமயமாக்கல்) பதவி ஒன்று புதியதாக தோற்றுவிக்கப்படும். ரூ.12.02 கோடி ரூபாய் செலவில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகள் உருவாக்கப்படும். ரூ.1.04 கோடி ரூபாய் செலவில் உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகளுக்கு அமைச்சுப்பணியாளர்கள் உருவாக்கப்படும்.

    ரூ.119.73 கோடி செலவில் 1,397 புதிய காவல் வாகனங்கள் வாங்கப்படும். அதன்படி, ரூ.2.20 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.1.76 கோடி செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.

    ரூ.6.50 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.3.25 கோடி செலவில் 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப் படும்.

    பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப்பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, ரூ.76 லட்சம் செலவில் சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும்.

    இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு வருடந்தோறும் ரூ.56 லட்சம் செலவில் செலவினமாக வழங்கப்படும். ரூ.3 கோடி செலவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நெரிசலை ஒழுங்குபடுத்த ரூ.3 கோடியில் 2 ஆயிரம் நகரும் தடுப்புகள் வாங்கப்படும்.

    ரூ.14.25 கோடி செலவில் காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க 475 காவல் நிலையங்களுக்கு இளையதளத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.15 கோடியில் 105 காவல் நிலையங்களுக்கு கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.87 கோடியில் புல காவலிற்கான 129 மொபைல் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.

    ரூ.100 கோடி மதிப்பில் கழிவு செய்யப்பட்ட (பழைய) பல வகை வாகனங்களுக்கு பதிலாக 1,340 புதிய வாகனங்கள் வாங்கப்படும். ரூ.6.02 கோடி செலவில் 6 காவல் ஆணையரகங்கள், சென்னை நகரத்தில் உள்ள 4 சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்காக 24 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும்.கடலோர பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிடம் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

    ரூ.5.48 கோடி செலவில் திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை பிரித்து திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். இந்த காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும்.

    ரூ.3.31 கோடி செலவில் அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக்குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில் காவலர்களின் பயிற்சிக்காக 19 வகையான சிறப்பு படைகலன்கள் வாங்கப்படும். ரூ.50 லட்சத்தில் நேரியல் அல்லாத சந்தி கண்டுபிடிக்கும் கருவி 5 வாங்கப்படும். ரூ.45 லட்சம் செலவில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 3 கருவிகள் வாங்கப்படும். ரூ.12 லட்சம் செலவில் ஆழமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 4 கருவிகள் வாங்கப்படும். ரூ.34 லட்சம் செலவில் ஊடுகதிர் மூலம் கண்டறியும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.1.50 லட்சத்தில் கையடக்க வாயிற்படி உலோக கண்டுபிடிப்பிற்கான 3 கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.25 லட்சத்தில் வாயிற்படி உலோக கண்டுப்பிடிப்பிற்கான 5 கருவிகள் வாங்கப்படும். ரூ.45 ஆயிரம் செலவில் 5 நீட்டிப்பு கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ3.15 லட்சம் செலவில் 35 புரோடர் கருவிகள் வழங்கப்படும். 98 ஆயிரம் செலவில் வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ.4.95 லட்சம் செலவில் 55 தேடுதல் பணிக்கான விளக்குகள் வாங்கப்படும். ரூ.3 லட்சம் செலவில் 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ.15.60 லட்சத்தில் 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.5.05 கோடி செலவில் பணித்திறன் மேம்பாட்டிற்காக 250 காவல் நிலையங்களுக்கென அடிப்படை சாதனங்கள் வாங்கப்படும். ரூ.12.20 கோடியில் அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.55 லட்சத்தில் 100 எண்ம முறையிலான 800 மெகா ஹெர்ட்ஸ் கையடக்க சாதனங்கள் வாங்கப்படும். ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு காவல் அகாடமிக்கு அனைத்து வகையான தடய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×