search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCERT"

    • ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
    • ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.

    ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    • ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள்.
    • புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டம்.

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரப்பா நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி பற்றிய வரலாற்று பாடத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

    அதில், அரியானாவில் உள்ள சிந்து சமவெளி தளமான ராகிகர்ஹியில் உள்ள தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பண்டைய டி.என்.ஏ பற்றிய சமீபத்திய ஆய்வுகள், ஹரப்பான்களும் வேதகால மக்களும் ஒரே மாதிரியானவர்களா என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு ஆரிய குடியேற்றத்தை நிராகரித்தது.

    ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள். ஆரிய படையெடுப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி என்.சி.இ.ஆர்.டி அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது

    '5,000 ஆண்டுகாலமாக எந்த இடறுமின்றி இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்' என என்.சி.இ.ஆர்.டி 12-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    'ஹரப்பா மக்களின் மரபணு இன்று வரை தொடர்கிறது. மேலும், தெற்காசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் ஹரப்பா மக்களின் வழித்தோன்றல்களே', என என்.சி.இ.ஆர்.டி கூறுகிறது

    ஆரம்ப கால ஹரப்பா மற்றும் பிற்பகுதி ஹரப்பா நாகரிகங்களுக்கு இடையே 'இடைவெளி இருந்தது' பற்றிய தகவல்களும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.

    'ஹரப்பன்களுக்கும் வைதீக (Vedic) மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தியும் புதிய பாடத்தில் என்.சி.இ.ஆர்.டி சேர்த்துள்ளது.

    ஆரியர்களின் குடியேற்றத்தை நிராகரிக்க (அரியானா) ராக்கிகர்கி தளத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியை என்.சி.இ.ஆர்.டி குறிப்பிடுகிறது

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    • தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
    • புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவை விரைவில் வெளிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்டி) தெரிவித்து உள்ளது. இந்தத் தகவலை சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ.இயக்குனர் ஜோசப் இமானுவேல் தெரிவித்ததாவது:-

    கடந்த ஆண்டு வரை என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக 3 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட உள்ள புதிய பாடத் திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

    • அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
    • பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

    சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம் உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாடப் புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.
    • 12ம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் னெ்ற இடம் பெறும் என்று அறிவிப்பு.

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அந்த வகையில், என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும் என்று என்சிஇஆர்டி-ன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "பாரத்" என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், பாட புத்தகங்களில் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. புதிய புத்தகம் அச்சிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

    போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.

    அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
    ×