என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textbooks"

    • பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

    அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

    எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

    அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    • பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.
    • அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரையும், பிளஸ் 1 பொது தேர்வு மார்ச் 14-ந் தேதி துவங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும் , பிளஸ் 2 பொதுதேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும் நடக்கிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடனோ, கோடை விடுமுறைக்கு முன்னதாகவோ அவர்கள் அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    பொதுத்தேர்வை அவர்கள் எதிர்கொள்வதற்கு இது உதவும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்கி விட்டது. பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர். 

    • அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.

    இந்த புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள. டி.பி.ஐ. வளாகம், அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாட நூல் கழக கிடங்கு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இந்த புத்தகங்களை பெற தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு இந்த பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வினியோகம் செய்ய டி.ஜி.பி. வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    தமிழ்நாடு பாட நூல் கழகம் மொத்தம் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சடித்துள்ளது. இதில் 3.75 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 1.25 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    மேலும் மாணவர்களுக்கான பைகள், காலணிகள், சாக்ஸ் வினியோகமும் தொடங்கியுள்ளது. கலர் பென்சில்கள், கிரேயான்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதத்திற்கு முன்பு வழங்கப்படும்.

    9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முதல் பாடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி 'செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

    • மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

    வேலுார்:

    கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ந் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதியும் வகுப்பு கள் தொடங்க உள்ளன.

    இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    வேலுார் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.

    முதல்கட்டமாக, வேலுார், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.

    அதோடு, மாணவர் களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முருக பவனத்தில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி, பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    பாடநூல்களை பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவச புத்தகங்கள் கிடைக்கும்.

    தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தனது பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாட புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக 6ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திராவிட மொழி குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தை சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று இதற்கான உத்தரவை வழங்குவார் என்றார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    அப்போது தொன்மை யான புராதான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பள்ளி அதன் பழமை மாறாமல் இருக்க, பள்ளி குழந்தைகள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்கான ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாண வர்களுக்கு இனிப்பு கள், புதிய பாடப் புத்தகங் களை வழங்கினார். தொடர்ந்து குழந்தை தொழி லாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், கோடை விடுமுறை முடிந்து முதல்நாள் பள்ளிக்குச் வந்துள்ள மாணவர்களக்கு வாழ்த்துகள். படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள். உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும். நான் உறுதுணையாக இருப்பேன் என்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்திற் கேற்ப மாணவ- மாணவி கள் கல்வி கற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கவுன்சி லர்கள் மும்தாஜ், சுரேஷ் குமார், முன்னாள் கவுன்சில ரும், தி.மு.க.வட்ட செயலா ளருமான ரவிந்திரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், பகுதி செய லாளர் டூவிபுரம் ரவி, 38-வது வார்டு மொய்தீன் மற்றும் ஜேஸ்பர் ஞான மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு தொடங்கிய ஓரிரு நாளில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு பகுதி பள்ளிகளுக்கான புத்தகம், நோட்டுகள் குப்பா ண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு பகுதி பள்ளிகளுக்கு புத்தகங்கள் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்ப ட்டிருந்தது. தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை, மொழிப்பாடம், பிற பாடங்கள் உட்பட 70 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்தாம் வகுப்புக்கு 14 ஆயிரம் புத்தகங்கள், குறைந்தபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு 79 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.

    இவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    • அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
    • பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

    சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம் உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாடப் புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பள்ளி களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் வெயிலின் தாக்கத்தால் 10-ம் தேதி ( இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

    அதன்படி கோடை விடுமுறை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் சந்தோச இனிப்புடன் தொடங்கும் வகையில் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் இன்முகத்தோடு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றனர்.

    மேலும் 2 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசினர்.

    தொடர்ந்து 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. முதல் நாளிலே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் மாணவர்கள் வாங்கி படித்தனர். தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.

    • பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
    • 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 1ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.16 உயர்ந்து, ரூ.550க்கு விற்பனையாகிறது. 2ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530க்கு விற்பனையாகிறது.

    3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620க்கு விற்பனையாகிறது. 4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650க்கு விற்பனையாகிறது.

    5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710க்கு விற்பனையாகிறது. 6ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது.

    7ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1200 உயர்ந்துள்ளது. 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1000 உயர்ந்துள்ளது.

    9ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது. 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    • 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    * பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பாட புத்தகங்களின் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.

    * 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கு தயாராவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * விலைவாசி உயர்வால் சிரமப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    * அரசு பாடத்திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவரிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

    * பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    * பாட புத்தங்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ×