search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
    X

    பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்

    • பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.
    • அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரையும், பிளஸ் 1 பொது தேர்வு மார்ச் 14-ந் தேதி துவங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும் , பிளஸ் 2 பொதுதேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும் நடக்கிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடனோ, கோடை விடுமுறைக்கு முன்னதாகவோ அவர்கள் அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    பொதுத்தேர்வை அவர்கள் எதிர்கொள்வதற்கு இது உதவும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்கி விட்டது. பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.

    Next Story
    ×