என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட புத்தகங்கள்"

    • 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் ஜூன் 2 -ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே அனைத்து பாட புத்தகங்களும் விநியோகிக்கப்படும்.

    * விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன் புத்தகங்கள் வழங்கப்படும்.

    * 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

    * அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த பள்ளி பாட புத்தகங்கள் சர்ச்சை குறித்து ஆய்வு நடத்தும்படி சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த படங்கள் இனரீதியான மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல வரையப்பட்டிருந்தது.

    மேலும் குழந்தைகள் நாக்கு வெளியே தள்ளி கொண்டும், கோணலான வாயை வைத்துக்கொண்டும், ஓரப்பார்வை பார்த்துக்கொண்டும் இருப்பது போல ஆபாச சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. சிலர் அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்தபடி உள்ளன. இதுகுறித்து புகார் தெரிவித்துள்ள மக்கள், இந்த பாட புத்தகங்கள் முறையாக, படித்து பார்க்கப்படாமல், மறுஆய்வு செய்யப்படாமல் இருந்துள்ளது வெளிவந்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த பள்ளி பாடபுத்தகங்கள் சர்ச்சை குறித்து ஆய்வு நடத்தும்படி சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 
    • ஈரோடு மாவட்டத்தில் 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிர படுத்தப்ப ட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம் பாளையம் ெரயில்வே காலனி மேல்நிலைப்ப ள்ளியில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாட நூல்களும், 6 முதல் 9-ம் வகுப்பு களுக்கான நோட்டுகளும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர்கள் கூறியதாவது:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என 55 பள்ளிகளுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பாட புத்தகங்களுக்கு தேவையான 5 வகையான நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. #Gaja
    சென்னை:

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் பாட புத்தகங்கள் மழை தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் அரசு பாட நூல் கழகம் இலவசமாக வழங்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் பாட புத்தகங்களை இழந்தவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நாகப்பட்டினத்துக்கு 1 லட்சத்து 57 ஆயிரத்து 485, தஞ்சாவூருக்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 175, திருவாரூருக்கு 55 ஆயிரத்து 391, புதுக்கோட்டைக்கு 21 ஆயிரத்து 7 உள்பட 3 லட்சத்து 95 ஆயிரத்து 78 புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வளவு புத்தகங்கள் தேவை என்றாலும் வழங்க தயாராக இருக்கிறோம். போதுமான அளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

    இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ×