search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening of schools"

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

    பள்ளிகள் திறப்பு

    6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது.

    அடம்பிடித்து அழுதனர்

    அப்போது ஒரு சில குழந்தைகள் பெற்றோர் வண்டியில் இருந்து இறக்கி விடும் போது பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதனர்.

    இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப் பட்டதால் 4 ரோடு, கோட்டை, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், திருவாகவுண்டனூர், ராமகிருஷ்ணா சாலை, குகை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளிகள் திறக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா னார்கள் என்றனர்.

    • வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறக்கவில்லை.
    • ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசிய காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். 

    இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

    இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதையும் காணமுடி ந்தது. கடலூரில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களு க்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

    • மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜூன் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை இன்றும் (12-ந்தேதி)பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என மொத்தம் 2,168 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை 2023-24-ம் கல்வி ஆண்டான புதிய கல்வி ஆண்டில் வரவேற்கும் வகையில் பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை மலர்தூவியும், நெற்றியில் திலகமிட்டும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளையும் ஆசிரிரியர்கள் வழங்கினர். இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ- மாணவிகளும் புன்னகை மலர்ந்த முகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து முதல் நாள் பாடங்களை படிக்கத் தொடங்கினர்.



    மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

    பள்ளிகள் திறந்த இன்றே அனைத்து அரசு பள்ளிகள்,மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி பள்ளி களிலும் இன்று பாட புத்தகங்கள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

    மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் அனைத்து பள்ளி களிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர்.

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மதுரையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் அதிகளவில் சாலைகளில் சென்றன. இரு சக்கர வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் அனைத்து வரப்பட்டதால் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கடிகள் ஏற்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை இன்று 12 -ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்க ளும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசும்பணிகள், வகுப்பறைகளில் டேபிள்கள் வைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    இன்று காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக இரும்பு பெட்டிகள் மற்றும் தங்களுக்கு தேவையான உடைமைகளை பெற்றோர்களுடன் எடுத்து வந்ததையும் காண முடிந்தது. முன்னதாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். காலை முதல் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர். 

    இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தலைமை யாசிரியர் செல்வகுமாரி , உதவி தலைமைஆசிரியர் கலைவாணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட்டுகள் கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். மேலும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் பண்ருட்டி யிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் பாடப்புத்த கங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வரு கிறது.இதனைமுன்னிட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பட்டது.

    • கலெக்டர் பாட புத்தகங்களை வழங்கினார்
    • மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி திறந்த முதல் நாளிலே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.

    கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது.

    தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியானது.

    அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் 1,266 பள்ளிகள், திருவண் ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 980 பள் ளிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,168 பள்ளி. கள் என 4 மாவட்டங்க ளில் 5 ஆயிரத்து 469 பள்ளிகள் உள்ளன.

    இந்த பள்ளிகளில் கடந்த சில நாட்களாக வகுப்பறைகளை முழு அளவில் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கழிவறைகள், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை உட் பட 4 மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.

    பள்ளிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்பு சந்தித்த தனது சக மாணவர்களை அரவணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று முதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாட புத்தகங்களை வழங்கினார். அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது.

    • கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன.
    • உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    உடுமலை:

    கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன. இதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்புக்கு தயாராக உள்ளன.

    பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகத்திற்குள் வளர்ந்து நிற்கும் செடிகளை அப்புறப்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன.எந்தவொரு பணிக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது என்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப்பணியாளர்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு தூய்மைப் பணிக்கென 2,500 ஒதுக்கீடு செய்தும் பணியாளர்கள் வர தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் தோறும் இரு தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.கட்டட சீரமைப்பு பணிகள் ஆசிரியர்களின் சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல நகராட்சி, பேரூராட்சி நீங்கலாக கிராமப்புற பள்ளிகளுக்கு மட்டும் தூய்மைப்பணிக்கென ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாதம் 2,500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

    இந்த தொகையை பெற்று தூய்மைப் பணி மேற்கொள்ள எவரும் முனைப்பு காட்டுவதில்லை. பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உடுமலை அமராவதிநகர் உண்டுஉறைவிடப்பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. மலைவாழ் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உறைவிடம் மற்றும் உணவு வசதியுடன் அடிப்படை கல்வியும் வழங்க, இப்பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.இங்கு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மறையூர் உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.பள்ளியின் கட்டமைப்புகளும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான தங்கும் அறைகள், வகுப்பறை கட்டடம், சுற்றுசுவரும் தற்போது கட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக இங்கு பராமரிக்கப்படுகிறது. புதிய கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளியை நடுநிலையாக தரம் உயர்த்துவதற்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நடுநிலைப்பள்ளியாக மாற்றுவதற்கான இடவசதியும் பள்ளி வளாகத்தில் இருப்பதால் பெற்றோரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக தரம் உயர்த்தப்படுவதன் வாயிலாக கூடுதல் மாணவர் சேர்க்கை பதிவு நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

    மேலும் மாணவர்கள் துவக்கநிலை கல்வியை நிறைவு செய்தவுடன் நகர்புறப்பள்ளிகளில் வகுப்பு சேர்ந்தும், விடுதி தனியாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும்பான்மையான மலைப்பகுதி பெற்றோர் தயக்கம் காட்டி மீண்டும் மலைப்பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். நடுநிலையாக மேம்படுத்துவதால் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத கல்வி பெற முடியும் என கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

    பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியை தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் பயன்பெற முடியும் என்றனர்.

    உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள குழந்தைகள், அடுத்தடுத்த உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு, மலையாண்டிபட்டணம் உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர்.கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

    கொரோனாவுக்கு முன் வரை உடுமலையில் இருந்து கல்லாபுரம் செல்வதற்கு ஆண்டியகவுண்டனூர் வழிதடத்தில் 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின் பஸ்கள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டதோடு, பள்ளி நேரத்தில் பஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் காலை 8மணிக்கு கல்லாபுரத்தில் இருந்து உடுமலைக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சில் பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் என கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஆண்டியகவுண்டனூரில் இருந்து செல்லும் மாணவர்கள் வேறு வழியில்லாமல் கூட்ட நெரிசலில் பயணிப்பதால் பள்ளிக்கு செல்லும் முன்பே சோர் வடைந்து விடுகின்றனர். கூட்ட நெரிசலால் பல குழந்தைகள் பஸ்சில் ஏறாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. மாணவர்களை தனியார் வாகனங்களில் வாடகை செலுத்தி அனுப்பும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பிரச்சினையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும்நாளை 12-ந் தேதி பள்ளி–கள் திறக்கப்படவுள்ளன. பள்ளி வாகன விபத்துகள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி வாகன பராமரிப்பு, மேலாண்மை குறித்து, பள்ளி முதல்வர், மேற்பார்வையாளர், விளையாட்டு அலுவலர்களிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதா–வது:- பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் உள்ள கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்–குட்படுத்தப்பட்டன. ஆய்வின்போது பல பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தது. அந்தப் பள்ளி வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாளை 12-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயமாக கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் கேமரா குறித்து கடந்த ஒரு வருடமாக பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அதில் பலரும் பள்ளி வாகனங்களில் பொருத்தப்படும் கேமரா கிடைக்கவில்லை என்று காலம் தாழ்த்தி வந்தனர். அதற்கான கால அவகாசம் முடிந்து–விட்டது. தற்போது மீண்டும் கேமரா பயன்படுத்தப்படாமல் வாகனங்களை இயக்கினால் பள்ளி வாகனம் வட்டார போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
    • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் சில தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் 24 ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களின் எழுத்து திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர்.

    • 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.
    • உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டுகொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. இதற்கிடையே தேர்வு காலம் நெருங்கியதால் தேர்வுகள் நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.

    திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் போன்றவை அகற்றப்பட்டு வந்தன. இன்று காலை பள்ளி திறந்ததும் மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் பள்ளிக்கு வருகிற மாணவ-மாணவிகளை ஒவ்வொரு பள்ளி சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் தற்போது மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. இது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    பள்ளிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

    • கடலூர் மாவட்டத்தில் இன்று 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழு வதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ கம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க–ப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்ப–ட்டன.

    இதில் கடலூர் மாவட்ட–த்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங் கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் உள்ளதா? என்பதனை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவமாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாண வர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்ப றைக்கு அழைத்துச் சென்ற தையும் காணமுடிந்தது. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் மட்டும் நடந்தது.

    • கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    கடலூர்: கடலூர் அருகே காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூய்மைப் பள்ளிகள் இயக்கத்தினையும் மற்றும் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட வலியுறுத்தி சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்து பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வரவேற்று தெரிவித்ததாவது:- அரசுப் பள்ளிகள் நமது சொத்தாகும், நமது பள்ளியின் பெருமையினை நாம் உணர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளில் சேர்வதற்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு, பெண்கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி மாணவர்கள் நல் ஒழுக்கத்தோடு பெற வேண்டிய கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 13- ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • மதுரை பள்ளிகளில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவடைந்தது. பின்னர் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் வருகிற 13-ந் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    ×