search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கிய மேயர்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி, மாணவர்களுக்கு புதிய பாடபுத்தகங்களை வழங்கிய காட்சி.

    தூத்துக்குடியில் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கிய மேயர்

    • தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    அப்போது தொன்மை யான புராதான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பள்ளி அதன் பழமை மாறாமல் இருக்க, பள்ளி குழந்தைகள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்கான ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாண வர்களுக்கு இனிப்பு கள், புதிய பாடப் புத்தகங் களை வழங்கினார். தொடர்ந்து குழந்தை தொழி லாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், கோடை விடுமுறை முடிந்து முதல்நாள் பள்ளிக்குச் வந்துள்ள மாணவர்களக்கு வாழ்த்துகள். படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள். உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும். நான் உறுதுணையாக இருப்பேன் என்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்திற் கேற்ப மாணவ- மாணவி கள் கல்வி கற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கவுன்சி லர்கள் மும்தாஜ், சுரேஷ் குமார், முன்னாள் கவுன்சில ரும், தி.மு.க.வட்ட செயலா ளருமான ரவிந்திரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், பகுதி செய லாளர் டூவிபுரம் ரவி, 38-வது வார்டு மொய்தீன் மற்றும் ஜேஸ்பர் ஞான மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×