என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத்"

    • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதையொட்டி சேலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சென்னை, கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார்.

    முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.5 நிமிடம் சேலத்தில் நின்ற நிலையில் இரவு 8. 43 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.

    சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண்பதற்காக 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்

    வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.
    • பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு? செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா வருகிற 18-ந்தேதி கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றார்.

    மேலும், பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரம் இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பா.ஜ.க. பயப்படுகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • குடியரசு தலைவர் மாளிகை அழைப்பிதழில் பாரத் என அச்சிடல்
    • சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வர வாய்ப்பு எனத் தகவல்

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டமைப்புக்கு இந்தியா (I.N.D.I.A.) எனப் பெயரிட்டுள்ளது.

    இது இந்திய நாட்டை குறிப்பது போன்று உள்ளதால், பா.ஜனதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா- பாரத் சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில் "நமது தேசிய அடையாளம் பா.ஜ.க.-வின் தனிப்பட்ட சொத்து அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    • வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது
    • அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது

    "இந்தியா" பெயர் "பாரத்" என மாற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

    இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

    அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! #IndiaStaysIndia 

    இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
    • இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை

    "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்சித் கூறுகையில் "நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தீர்கள் என்றால், அதில் இந்தியா பாரத் எனவும் உள்ளது. பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. பா.ஜனதா வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

    • இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர்.
    • எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். டீம் இந்தியா அல்ல. டீம் பாரத். தனது கருத்து அரசியல் சார்பு சார்ந்தது அல்ல. சமீபத்திய தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகளின் சலுகைகளை நான் நிராகரித்தேன்.


    ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்.

    என அவர் கூறினார்.

    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • இந்தியா இனிமேல் பாரத் என பெயர் மாற்றம் அடையலாம் என தகவல்
    • துக்ளக் தர்பார் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?- அல்போன்ஸ்

    இந்தியா பெயரை பாரத் என மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியா கூட்டணி மீதான பயத்தால் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்து Reserve Bank of India என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிக்குமா?

    "துக்ளக் தர்பார்" என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 9, 10-ந்தேதிகளில் ஜி-20 சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

    ஜி-20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக அவர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்.

    வெளியுறவு அமைச்சகம் தயாரித்து வழங்கிய அந்த அழைப்பிதழ் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல ஜி-20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் 26 பக்க சிறு புத்தகத்திலும், "பாரதம்-ஜனநாயகத்தின் தாயகம்" என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இதற்கு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

    இதற்கிடையே இன்று இந்தோனேஷியா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் பெயரை இந்தியா என்றும் பாரதம் என்றும் அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் அதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாரதம் என்று பெயர் மாற்றும் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். என்றாலும் எதிர்க்கட்சிகள் பாரதம் பெயரை மத்திய அரசு அதிரடியாக மாற்றக்கூடும் என்று சந்தேகிக்கின்றன.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்தோனேஷியா நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் முன்பு அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பாரதம் பெயர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் பற்றியும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.

    மத்திய மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்ததும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
    • தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகள் ஆலோசனை நடத்தின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அல்லது முன்னாள் தலைவர் சோனியா இருவரில் ஒருவர் கடிதம் எழுதவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, இமாச்சல பிரதேசம் மழை வெள்ள பாதிப்பு, பாரத் பெயர் மாற்றம் விவகாரம், அதானி விவகாரம் உள்பட 10 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில் தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
    • பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது. 



    'பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்' என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது. ஆனால் அவர் கடந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இதனை முகப்பு படமாக வைத்திருப்பதே உண்மை நிலவரம் ஆகும். அப்போது முதல் தற்போது வரை டோனி தனது முகப்பு படத்தை மாற்றாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர் வலியுறுத்தல்.
    • ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விவகாரம் குறித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், "இந்தியாவின் கருத்துக்கணிப்பு - ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை குறிப்பிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    ×