என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பெயர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை: காங்கிரஸ் தலைவர்
Byமாலை மலர்5 Sep 2023 9:54 AM GMT
- பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
- இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை
"இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்சித் கூறுகையில் "நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தீர்கள் என்றால், அதில் இந்தியா பாரத் எனவும் உள்ளது. பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. பா.ஜனதா வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X