search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெயர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை: காங்கிரஸ் தலைவர்
    X

    பெயர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை: காங்கிரஸ் தலைவர்

    • பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
    • இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை

    "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்சித் கூறுகையில் "நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தீர்கள் என்றால், அதில் இந்தியா பாரத் எனவும் உள்ளது. பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. பா.ஜனதா வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

    Next Story
    ×