search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central ministers"

    • இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 9, 10-ந்தேதிகளில் ஜி-20 சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

    ஜி-20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக அவர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பு அனுப்பி உள்ளார்.

    வெளியுறவு அமைச்சகம் தயாரித்து வழங்கிய அந்த அழைப்பிதழ் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல ஜி-20 மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் 26 பக்க சிறு புத்தகத்திலும், "பாரதம்-ஜனநாயகத்தின் தாயகம்" என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இதற்கு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் மத்திய அரசு இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

    இதற்கிடையே இன்று இந்தோனேஷியா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பற்றிய அறிவிப்பில் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் மேலும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் பெயரை இந்தியா என்றும் பாரதம் என்றும் அழைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 பெயர்களையும் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்தால் அதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் அதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாரதம் என்று பெயர் மாற்றும் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். என்றாலும் எதிர்க்கட்சிகள் பாரதம் பெயரை மத்திய அரசு அதிரடியாக மாற்றக்கூடும் என்று சந்தேகிக்கின்றன.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) இந்தோனேஷியா நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் முன்பு அவசரமாக மத்திய மந்திரி சபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பாரதம் பெயர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் பற்றியும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.

    மத்திய மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்ததும் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் இன்று மத்திய மந்திரிகளை சந்திக்க உள்ளனர். அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிகிறது. #BJP #ADMK #ParliamentElection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது.

    இந்த அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    பலம் வாய்ந்த கூட்டணியாக பார்க்கப்படும் இந்த அணியை எதிர்கொள்ள பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. நெருங்கிய நட்புடனேயே உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டது.

    நாடு முழுவதும் வீசிய மோடி அலையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனி ஆளாக களம் இறங்கிய ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றியை ருசித்தார். ஆனால் இப்போது அது போன்ற சூழல் இல்லை. கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றதைபோல இந்த முறை அ.தி.மு.க.வால் கண்டிப்பாக வெல்ல முடியாது என்கிற நிலையே உள்ளது. இதனால் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. வில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் சேர்வதற்கு பாரதிய ஜனதாவே பக்க பலமாக இருந்தது. ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே பா.ஜனதா இந்த முயற்சியை மேற்கொண்டது. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது என்றே கூறலாம்.

    கடந்த தேர்தலிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா விரும்பியது. ஆனால் அவரோ யாரும் வேண்டாம் என்று தனியாக நின்றார். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி, எப்போதும் அ.தி.மு.க. மீது தனி பாசம் கொண்ட கட்சியாகவே இருந்து வந் துள்ளது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணியை சமாளிக்க தங்களோடு ஒருமித்த கருத்தோடு இருக்கும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி தமிழகத்திலும் கூட்டணி அமைப்பதில் அக்கட்சி தீவிரமாகி உள்ளது. இதற்காக அ.தி.மு.க.வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற தொடங்கியுள்ளது.

    தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி ஆகியோரை இருவரும் இன்று சந்தித்து பேசுகிறார்கள்.

    இந்த சந்திப்பின்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது தொடர்பாக இருவரும் பேச உள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார். ஜனவரி மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதற்குள் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க 2 கட்சி நிர்வாகிகளும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடி புத்தாண்டில் தமிழகம் வரும்போது பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #BJP #ADMK #ParliamentElection
    நரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ImranKhan #PMModi
    புதுடெல்லி:

    இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது. போலீஸ்காரரின் உயிரைவிட பசுக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நரேந்திர மோடி அரசு மதரீதியான சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

    இம்ரான்கானின் இந்த கருத்துக்கு மத்திய மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-

    1947-ம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதில் இருந்து அங்குள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற பல சிறுபான்மையினர் 90 சதவீதம் குறைந்துவிட்டனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 2 அல்லது 3 சதவீதம் தான் உள்ளனர்.

    சிறுபான்மையினர் கொல்லப்படுவது, மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவது, துன்புறுத்தப்படுவது என பாகிஸ்தான் போலன்றி, இந்தியாவில் அவர்கள் வளர்ந்து, நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்குதாரர்களாக உள்ளனர். நடிகர்கள் யூசுப்கான் என்கிற அனைவராலும் அறியப்படும் திலீப்குமார், அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் பல தலைமுறைகளாக இந்தியர்களால் போற்றப்படுகிறார்கள்.



    இவர்களைப்போல பாகிஸ்தானில் சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு நடிகரின் பெயரையாவது இம்ரான்கானால் கூறமுடியுமா? சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் நடைபெறும் நிலம் பாகிஸ்தான். பல தலைமுறைகளாக சிறுபான்மையினரின் ரத்தம் அந்த நிலம் முழுவதும் சிந்தப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அவர்களின் அறிவுரை, 100 எலிகளை தின்ற பூனை ஆன்மிக யாத்திரை சென்றது போல் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரின் அரசியல்சாசன, சமூக, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாப்பானதாகவே உள்ளது.

    இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

    அவர் மேலும், இதுபோன்ற பொதுவான கருத்து தெரிவிக்கும்போது அது பல தீமைகளையும், நமது நாட்டை இலக்காக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை நடிகர் நஸ்ருதீன்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மற்றொரு மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறும்போது, “இப்போது பாகிஸ்தான் போன்ற ஒரு பயங்கரவாத நாடு சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு பாடம் நடத்துகிறது. பாகிஸ்தானில் 23 சதவீதமாக இருந்த இந்துக்கள் இப்போது 2 சதவீதமாக குறைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பத்துக்கேற்ப வளர்ந்து வருகிறார்கள்” என்றார்.

    வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவேஷ் குமார் கூறும்போது, “அவர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் நல்லது என நான் கருதுகிறேன். அவர்களது உள்நாட்டு பிரச்சினைகளே இப்போது மிகவும் குழப்பத்தில் உள்ளது” என்றார். #ImranKhan #PMModi
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #AmitShah #Modi
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர்  மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அமித் ஷாவின் தலைமையில் இந்தியா முழுவதும் பாஜக கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அவரது கடின உழைப்பு கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து ஆகும். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழத்துகிறேன்’ என கூறியுள்ளார்.

    கடின உழைப்பு மற்றும் வியக்கத்தக்க ஒருங்கிணைப்புத் திறமை கொண்ட அமித் ஷாவின் தலைமையில் பா.ஜ.க. புதிய உச்சங்களை எட்டியிருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் டுவிட்டர் மூலம் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #AmitShah #Modi
    வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடும் நிலையில், நாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. #Parliament
    புதுடெல்லி:

    அரசுப்பணிகளில் காலியிடங்கள் குறித்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்தனர்.

    இதில் அதிகபட்சமாக பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் காவல் துறையில் 5 லட்சம் பணியிடங்களும், ரெயில்வே மற்றும் சுகாதாரத்துறையில் 4 லட்சம் பணியிடங்களும் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    ராணுவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும், நீதித்துறையில் நீதிபதிகள் உள்பட 5 ஆயிரம் பணியிடங்களும், அங்கன்வாடி மையங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும் மத்திய மந்திரிகள் தெரிவித்து உள்ளனர். #Parliament
    ×