search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் நிபந்தனை
    X

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: மத்திய அரசுக்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் நிபந்தனை

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
    • தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகள் ஆலோசனை நடத்தின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அல்லது முன்னாள் தலைவர் சோனியா இருவரில் ஒருவர் கடிதம் எழுதவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பு பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, இமாச்சல பிரதேசம் மழை வெள்ள பாதிப்பு, பாரத் பெயர் மாற்றம் விவகாரம், அதானி விவகாரம் உள்பட 10 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இது தவிர இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில் தி.மு.க. சார்பில் நீட் விவகாரம் பற்றி சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×