என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரேந்தர் சேவாக்"

    • விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது.
    • விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி தோல்வியடைந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 53-வது ஒருநாள் சதம் ஆகும். முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

    இந்நிலையில் நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடிக்கிறார் என விராட் கோலியை முன்னாள் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    • குவாலிஃபயர் 1 போட்டியின்போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது.
    • எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சேவாக் கூறியதாவது:-

    குவாலிஃபயர் 1 போட்டியின் போது பஞ்சாபை ஆதரித்தேன். அது தோற்றது. எலிமினேட்டரில் குஜராத்தை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை ஆதரித்தேன். அதுவும் தோற்றது. நான் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை ஆதரித்தாலும் அப்பொழுதும் தோல்விதான் மிஞ்சுகிறது. இப்போது ஆர்சிபியை ஆதரிக்கிறேன் என சிரித்தபடி கூறியுள்ளார்.

    அவர் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதால் ஆர்சிபி அணியும் தோல்வியடைந்து விடும் என அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

    • பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.
    • இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.

    நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.

    இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.

    என்று கூறினார்.

    • யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும்.
    • ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும்.

    மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.

    யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    • என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார்.
    • இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி வீரரும் தற்போது குஜராத் அணியின் வீரரான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார். அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அந்த நெருப்பை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்.

    என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

    சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 - 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார்.

    என சேவாக் கூறினார்.

    • சேவாக் இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்தார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு இதே நாளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார்.


    அதனை நினைவு கூறும் வகையில் சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கத்தில் அவர் முச்சதம் அடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அன்புடென்-ல் சேவாக் கர்ஜித்த தருணம் என்று தலைப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சேவாக் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல.
    • தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    புதுடெல்லி:

    சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

    இந்த நிலையில், மைதானத்தில் விராட் கோலி - கம்பீர் இடையேயான மோதல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்:-

    விராட் கோலி - கம்பீர் இடையே களத்தில் நடந்த மோதல் சரியல்ல. தோற்றவர்கள் அமைதியாக தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்.

    வெற்றி பெற்ற அணி கொண்டாட வேண்டும். ஏன் வார்த்தை போரில் ஈடுபட வேண்டும்?. இவர்கள் இருவரும் இந்தியாவின் அடையாளங்கள். இது போன்ற செயல்களால் இவர்களை பின் தொடரும் பல கோடி இளைஞர்கள், சிறார்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    • ரோகித் களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார்.
    • அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

    இந்த சீசனில் நடந்த 10 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும்.

    என்று சேவாக் கூறினார். 

    • ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
    • இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

    அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை.
    • ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    மும்பை:

    16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

    சென்னையை வீழ்த்தி குஜராத் கோப்பையை தக்க வைக்குமா அல்லது குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக சென்னை கோப்பையை வெல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதாக தனக்கு தெரிந்த 5 டாப் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

    நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். நான் இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் 5 சிக்சர்களை அடித்து யாரும் அணியை வெற்றி பெறச்செய்யவில்லை என நினைக்கிறேன்.

    இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்கிறேன். அவர் 33 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. அவருக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த படி அமையவில்லை. ஆனால் இந்த வருடம் அருமையாக செயல்பட்டுள்ளார். மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது.

    இதையடுத்து 4-வதாக சூர்யகுமார் யாதவ். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

    ஏனெனில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நான் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்கிறேன். அது ஹென்ரிச் க்ளாசென் . ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டு பிலிசிசை அவர் முந்தினார்.
    • லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.

    அகமதாபாத்:

    குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த ஐ.பி.எல். சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    23 வயதான பஞ்சாபை சேர்ந்த அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நேற்று நடந்த 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் சதம் அடித்தார். சுப்மன் கில் 60 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்தார்.

    இந்த தொடரில் அவர் அடித்த 3-வது செஞ்சூரியாகும். கடந்த 21-ந் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக 104 ரன்னும் (அவுட் இல்லை), 15-ந் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக 101 ரன்னும் அடித்திருந்தார்.

    129 ரன் எடுத்ததன் மூலம் 'பிளேஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்தர் சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். 2014 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் வீரேந்தர் சேவாக் 122 ரன் எடுத்தார். தற்போது சுப்மன் கில் அவரை கடந்தார்.

    மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.

    மேலும் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டுபெலிசிசை அவர் முந்தினார். இந்த தொடரில் 851 ரன்களை குவித்து உள்ளார். இந்த சீசனில் 800 ரன்னை எடுத்த முதல் வீரர் சுப்மன் கில் ஆவார்.

    சுப்மன் கில் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர். விராட் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங், ரெய்னா, ரிஷப்பண்ட், மைக்கேல் வாகன், வீரேந்தர் சேவாக் உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.

    • ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.
    • 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் சேவாக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடங்க வீரர் சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரானா நவீத் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    (டெஸ்ட்டில்) சேவாக்கின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சுலபம். ஆனால், ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசுவது மிகவும் கடினம். என்றார். 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 586 ரன்கள் குவித்துள்ளார்.

    251 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சேவாக் 8 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 19 டி20 கிரிக்கெட்டில் விளையாடிய சேவாக் 394 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×