என் மலர்
நீங்கள் தேடியது "Rashid Khan"
- எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
- ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.
- எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.
- டுவேன் பிராவோவை முந்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரான எஸ்.ஏ.20 தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ரஷித் கான் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்டுகளை எட்டினார். இது டி20 கிரிக்கெட்டில் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாக மாறியது. முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 631 விக்கெட்டுகளை வீழ்த்தி டுவேன் பிராவோ அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக இருந்து வந்தார்.
26 வயதான ரஷித் கான் சர்வதேச டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், உள்ளூர் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் 472 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பிரான்சைஸ் கிரிக்கெட்டை பொருத்தவரை ரஷித் கான் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்கஸ், சசெக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
461 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ரஷித் கானின் சராசரி 18.08 ஆகும். டுவைன் பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 24.40 ஆகும். ரஷித் கான், டுவைன் பிராவோ வரிசையில் சுனில் நரைன் (574 விக்கெட்டுகள்), இம்ரான் தாஹிர் (531 விக்கெட்டுகள்) மற்றும் ஷகிப் அல் ஹாசன் (492 விக்கெட்டுகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளது.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ரஹ்மத் ஷா 139 குவித்தார்.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி நாள் இன்று நடைபெற்றது. மீதம் இருந்த 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதல் இருதரப்பு தொடரை ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வென்றுள்ளது.
- ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா சதமடித்து அணியை மீட்டார். சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி நாளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 2 விக்கெட்டை வீழ்த்த வேண்டும், ஜிம்பாப்வே வெற்றி பெற 73 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒரு மறைமுக பதிவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது.
அந்த மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணிகள் பலமாக திகழும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் டைட்டம்ஸ் அணி கடந்த ஆண்டு சுப்மன் கில்லை அந்த அணியின் கேப்டனாக நீடிக்க வைத்தது.
இந்நிலையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு மறைமுக குறிப்பில், எ நியூ ஸ்லேட் (A New Slate), எ நியூ ஸ்டோரி (A New Story) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்கள் ஏதோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிய வந்தது.
A clean slate. A new story. ✨#AavaDe pic.twitter.com/fNt319mJlP
— Gujarat Titans (@gujarat_titans) January 1, 2025
அதிலும் குறிப்பாக அந்த பதிவிற்கு கீழ் ரஷீத் கானின் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டுள்ளதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் சுப்பன் கில்லை தக்க வைத்த விலையை விட கூடுதல் விலை கொடுத்து அந்த அணி ரஷீத் கானை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ரஷீத் கான் அவர்களிடம் ஏதாவது நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை மட்டுமே கேப்டன்சி செய்துள்ள ரஷீத் கான் அந்த இரண்டு போட்டிகளிலுமே கேப்டனாக தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோன்று அந்த இரண்டு முறையும் அவர் கேப்டனாக இருந்ததும் குஜராத் அணிக்காக மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஒட்டுமொத்தமாகவே சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் பிரான்ச்சைசி டி20 கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ரஷித் கான் 34 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை
- கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
???????? pic.twitter.com/rYtNtNaw14
— Rashid Khan (@rashidkhan_19) December 4, 2024
இந்நிலையில் தாலிபான் அரசின் இந்த தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது.
நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது.
ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை
- குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் வாங்கியது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.
அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.
இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.
கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.
வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.
அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:
1. ரஷித் கான், 2. சுப்மன் கில், 3. சாய் சுதர்சன், 4. ராகுல் தெவாடியா, 5. ஷாருக் கான், 6. ககிசோ ரபாடா, 7. ஜோஸ் பட்லர், 8. முகமது சிராஜ், 9. பிரசித் கிருஷ்ணா, 10. நிஷாந்த் சிந்து, 11. மஹிபால் லோம்ரோர், 12. குமார் குஷாக்ரா, 13. அனுஜ் ராவத், 14. மானவ் சுதார், 15. வாஷிங்டன் சுந்தர், 16. ஜெரால்ட் கோட்சீ , 17. குர்னூர் ப்ரார், `18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 19. சாய் கிஷோர், 20. இஷாந்த் சர்மா, 21. ஜெயந்த் யாதவ், 22. க்ளென் பிலிப்ஸ், 23. கரீம் ஜனத், 24. குல்வந்த் கெஜ்ரோலியா. 25. அர்ஷத் கான்
Aapda Titans, Aapdo home, Aapdo pride ?#AavaDe | #TATAIPLAuction | #TATAIPL pic.twitter.com/ld2N0qWCpm
— Gujarat Titans (@gujarat_titans) November 25, 2024
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
- ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.
இவர்களுடைய திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது. ஓட்டலுக்கு வெளியே ஏராளமானோர் நடந்து கொண்டிருக்க துப்பாக்கியுடன் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
Scenes outside the hotel which is hosting Rashid Khan's wedding in Kabul. pic.twitter.com/LIpdUYVZcA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 3, 2024
ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி "ஒரேயொரு கிங் கான் (King Khan) ஆன ரஷித் கானுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
The wedding hall that will host Rashid Khan's wedding ceremony in Kabul, Afghanistan today ?#ACA pic.twitter.com/FOM2GCkqZw
— Afghan Cricket Association - ACA (@ACAUK1) October 2, 2024
26 வயதாகும் ரஷித் கான் ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
Congratulations to the one and only King Khan, Rashid Khan, on your wedding! Wishing you a lifetime of love, happiness, and success ahead.@rashidkhan_19 pic.twitter.com/fP1LswQHhr
— Mohammad Nabi (@MohammadNabi007) October 3, 2024
2015-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.
- இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது.
- ரஷித் கான் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் 5 சிக்சர்களைப் பறக்க விட்டார்.
இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30 ரன்கள் எடுத்தார். சௌதர்ன் பிரேவ்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, பிரிக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து விளையாடிய சௌதர்ன் பிரேவ்ஸ் அணிக்கு கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஓவரை உலகின் நம்பர் ஒன் டி20 சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் வீசினார்.
அவர் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரையே பிரித்து மேய்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் பொல்லார்ட். பொல்லார்ட் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (23) ரன்கள் விளாசி அவுட்டானார்.
6️⃣ 6️⃣ 6️⃣ 6️⃣ 6️⃣
— Rao kashif (@raokash) August 10, 2024
- 5 consecutive sixes by Kieron Pollard against Rashid Khan in the Hundred. ??#pollard #Cricket #Crazy #Rashidkhan pic.twitter.com/wr0ijyS0En
இறுதியில் 99-வது பந்திலேயே சௌதர்ன் பிரேவ்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
- டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
- 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ரஷித் கான் (25) ஒருவராக உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான இவர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
இவர் 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிராவோ உள்ளார். அவர் 543 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-
630 - டுவைன் பிராவோ (543 போட்டிகள்)
600 - ரஷித் கான் (438 போட்டிகள்)
502 - இம்ரான் தாஹிர் (388 போட்டிகள்)
492 - ஷாகிப் அல் ஹசன் (436 போட்டிகள்)
- எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
- எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.
இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.
ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.