search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashid Khan"

    • அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் அடித்த சிக்சர் வைரலாகி வருகிறது.
    • அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20-யில் ஆப்கானிஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 59 ரன்களையும், ரஷித் கான் 25 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஆண்ட்ரு பால்பிர்னி 45 ரன்களையும், கரேத் டெலானி 39 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது ரஷித் கான் அடித்த சிக்சர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆட்டத்தின் 18-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் நோ லுக்கிங் ஷாட் மூலம் பந்தை சிக்சருக்கு விளாசினார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். இந்த அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர் தரவரிசையில் ரவி பிஷ்னோயுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் இணைந்து முதலிடத்தை பிடித்தார். இருவரும் 692 புள்ளிகளுடன் உள்ளனர். இதே போல் 3-வது இடத்தில் ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), ஹசரன்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.


    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (758) உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காள தேசத்தின் ஷகீப்-அல்-ஹசன் 272 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (210), 4-வது இடத்தில் இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா (200) உள்ளனர்.

    • டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது.
    • இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்தார்.

    பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.

    • 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று சென்னை வந்த டோனியை ஆப்கானிஸ்தான் வீரர் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரஷித்கான் அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் உங்களை சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சி என தலைப்பிட்டுருந்தார்.


    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    • நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுருந்தார்.
    • இவரது தலைப்புக்கு ரஷித்கான் கிண்டலாக பதில் அளித்தார்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லா மூன்றாம் இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

     

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் தெருவில் சில கிரிக்கெட் ஆர்வலர்களுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் சாஹல் பேட்டிங் செய்வது போல இருந்தது. சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு சாஹல் தலைப்பிட்டுருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சுவாரஸ்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த தலைப்புக்கு ஆப்கானிஸ்தான் அணியின் சூழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், 'கல்லி கிரிக்கெட்டில் ஒரு சிக்சராவது அடிங்க சகோதரா' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.

    அதற்கு பதிலளித்த சாஹல், இங்கே சிக்சர் அடித்தால் அவுட் என தெரிவித்தார். 

    • கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குவாலிபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்த போட்டியில் 172 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா என ரசிகர்களுக்கு கேள்வியாக இருந்தது. ஏனென்றால் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித்கான் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது வேற லெவலாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் அணி பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒன்று பாண்ட்யா. இவருக்கு டோனி அழகாக ஸ்கெட்ச் போட்டார் என்றே சொல்லலாம்.

    பவர் பிளேயில் முதல் 5 ஓவரில் 39 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பவர் பிளேயின் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி வீரர்கள் இருந்தனர். அந்த ஓவரை தீக்சனா வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் 4-வது பந்தை பாண்ட்யா ரிஷ்க் எடுத்து ஆப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார். அது பீல்டரிடன் தஞ்சம் புகுந்தது. 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்த நிலையில் 2 பந்துகளில் கண்டிப்பாக ரிஷ்க் ஷாட் ஆட முயற்சிபார்கள் என நினைத்த டோனி உடனே லேக் திசையில் உள்ள பீல்டரை உடனே ஆப் திசையில் மாற்றி அதே திசையில் பந்து வீச வைத்தார்.


    இதை கொஞ்சம் கூட மதிக்காத பாண்ட்யா அடுத்த பந்தையே மீண்டும் ஆப் திசையில் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது ஜடேஜா கையில் புகுந்தது. இதனால் பாண்ட்யா 8 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ரஷித் கானுக்கு அருமையான திட்டம் தீட்டினார். அனைத்து திசையில் அருமையாக விளையாடி கொண்டிருந்த ரஷித் கானுக்கு ஆப் திசையில் பீல்டர்களை அதிகப்படுத்திய டோனி, பந்து வீச்சாளரை ஆப் திசையில் வைடு யார்க்கர் போட சொன்னார். டோனி கணித்தப்படியே அவர் வைத்த பொறியில் ரசித் கான் எலி போல் சிக்கினார்.

    இதனால் குஜராத் அணி 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
    • இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

    அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
    • எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார்.

    மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்:-

    எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

    அதோடு அதனை நாங்கள் சரியாகவும் பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிரான திட்டங்கள் தவறி போனால் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்பதை இந்த போட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

    இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

    ×