என் மலர்
நீங்கள் தேடியது "Rashid Khan"
- ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
- ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.
காபூல்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை சூப்பர் ஓவரில் போராடி தோற்றது கவனிக்கத்தக்க ஒரு ஆட்டமாக இருந்தது.
இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ரஷித் கானை கேப்டன் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக தொடக்க வரிசை பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரன் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு வீரராக ரஷித் கான் அணியில் நீடிக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
- ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதனால் ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சர்ட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை சென்று ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
- நியூசிலாந்து அணிக்கும் எதிராகவும் தோல்வியடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை.
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி "டி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பொதுவாக 3 போட்டிகள் முடிந்த பின்னர்தான் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா? இல்லையா? என்பது தெரியவரும். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்தையும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் எதிர்கொண்டது.
4 நாட்களில் அடுத்த இரண்டு பெரிய அணிகளை சந்தித்து தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை போட்டி சென்ற பின்னர் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அதிர்ஷ்டம் இல்லாதது என்று அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:-
பெரிய தவறுகள் எதுவும் நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நாங்க சிறந்த கிரிக்கெட் விளையாடினோம். கொஞ்சம் துரதிருஷ்டம் இருந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்க வெற்றிக்கு ரொம்ப நெருக்கமா இருந்தோம். 2 சூப்பர் ஓவரில் விளையாடினோம். இது நாங்க ரொம்ப முயற்சி பண்ணோம்னு காட்டுதுன்னு நினைக்கிறேன்.
நீங்க எல்லா ஆட்டங்களையும் ஒருதலைப்பட்சமா பார்த்திருப்பீங்க. ஒரு அணியாக, ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அதுதான் நடக்கும்னு நான் நினைக்கிறேன்.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் அதிக டி20 போட்டிகளில் விளையாடியிருந்தால், இந்த அணி எங்களை எங்கு வெல்ல முடியும், எங்கு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது பற்றிய ஒரு யோசனை எங்களுக்கு இருந்திருக்கும். நீங்கள் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறை விளையாடினால், அதுவும் உலகக் கோப்பை போட்டியில். தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லாதது அகும்.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளில் விளையாடினால், எங்களுக்கு நடந்தது போல உங்கள் உலகக் கோப்பையும் நான்கு நாட்களில் முடிவடையும். நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் தோற்றோம்; நாங்கள் பெரும்பாலும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டோம். எனவே, இந்த அழுத்தம் வேறுபட்டது. நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறிய தவறு செய்தால், நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிடுவீர்கள்.
நீங்கள் அவர்களுடன் விளையாடினால், உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும். நீங்கள் விளையாடவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய திட்டமிடலுடன் வருவார்கள்.. நியூசிலாந்தில் நாம் பார்த்தது போல, அவர்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் வந்தார்கள்... நாம் அவர்களுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ, அவ்வளவு சிறப்பாக செயல்படுவோம் என்று நினைக்கிறேன், உலகக் கோப்பையில் மட்டுமல்ல, இருதரப்பு தொடரிலும்.
நீங்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால் உலகக் கோப்பை வெற்றி ஒரு பெரிய விஷயம்.
இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.
- ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடுகிறது.
- சொந்த நாட்டில் விளையாடுவது கனவை விட பெரியது என்கிறார் ரஷித் கான்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ரஷித் கான் கூறியதாவது:-
உண்மையை சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது எனக்கும், அணிக்கும், ஒவ்வொரு தனிப்பட்ட வீரருக்கும் இது உலகக் கோப்பையை விடப் பெரியது.
நாங்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறோம். அப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் வீரர்களை எப்படி வரவேற்கிறார்கள், அவர்கள் கிரிக்கெட்டை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை இந்த உலகமே பார்க்கும்.
சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒரு கனவை விடவும் மேலானது.
இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றதில்லை. ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.
- பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன்.
- முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 20 ஓவர் போட்டி அணி கேப்டன் ரஷீத்கான் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டு மிராண்டித்தனமானது. பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார். அதேபோல் முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.
அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட்லீயின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.
அபுதாபி:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அதன்படி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் டி20 150-க்கு கூடுதலான விக்கெட்டும் ஒருநாளில் 200-க்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய வீரராவார்.
ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தில் ரஷித்கான் உள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் சவுத்தி 174 டி20 விக்கெட்டும் 221 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீயின் சாதனையையும் ரஷித் கான் முறியடித்துள்ளார். குறைந்த ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் (101 போட்டிகள்), ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் (102 போட்டிகள்), இந்திய வீரர் முகமது ஷமி (103 போட்டிகள்) நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (106 போட்டிகள்) ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (107 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர்.
- ஓமர்சாய், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியால் 221 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஓமர்சார், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 48.5 ஓவரில் ஆல்அவுட் ஆனது.
வங்கதேச அணியின் முதல் மூன்று வீரர்கள் சைஃப் ஹசன் (26), தன்சித் ஹசன் (10), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர். இதனால் வங்கதேச அணி 221 ரன்கள் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
- ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
- 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
- லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.
ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம்.
- நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ரஷித் கான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் எடுக்க கூட முடியாமல் திணறினார். மேலும் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் பெற்றுக் கொண்டேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது. பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன்.
அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன். அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்.
என்று ரஷித் கான் கூறினார்.






