என் மலர்
நீங்கள் தேடியது "Mohammad Nabi"
- ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
- ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
- இதையடுத்து ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து நபி விலகியுள்ளார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார்.
இதுதொடர்பாக முகமது நபி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாங்களும் விரக்தி அடைந்துள்ளோம்.
கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் எனது முடிவுகளில் வேறுபாடு இருந்துள்ளது. இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது. எனவே, உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். அணி நிர்வாகம் விரும்பினால் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
- வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் 156 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் ஐசிசி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார். வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி 3 இடங்கள் பின் தங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டாப் 10-ல் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் நேபாள் வீரர் சிங் ஐரீ 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மேலும் இந்திய ஆல் ரவுண்டரான அக்சர் படேல் மற்றும் மேக்ஸ்வெல் 18-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முகமது நபி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
- தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி இடம் பெற்றுள்ளார். 40 வயதான அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 18 வயதான தனது மகன் ஐசாகிள், ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட உள்ளதால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.
நபியின் மகன் ஐசாகிள், 2024-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் நான்கு போட்டிகளில் விளையாடி 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்.






