என் மலர்
நீங்கள் தேடியது "marcus stoinis"
- டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
- ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 4ஆவது பந்திலேயே ஹெட்டை (6) வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிசை 1 ரன்னனில் வெளியெற்றினார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக அர்ஷ்தீப் சிங், பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிட்செல் மார்ஷ் திணறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இவர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். அவர் 23 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் 12 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னைத் தொட்டது.
தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் 14 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மிட்செல் ஓவன் முதல் பந்திலேயே வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இவரின் முதல் அரைசதம் இதுவாகும்.
19ஆவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்துள்ளது. ஷார்ட் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.
- 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010
2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014
3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021
மேலும் இப்போட்டியில் 327.78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
- ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
- ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
- இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.
இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
"இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
- லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
- இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.
அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.
வெற்றியுடன் விடைபெறுவது யார்?
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.
லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
- அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.
ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.
Arjun Tendulkar एक शानदार ऑल राउंडर खिलाड़ी है लेकिन लोग यह देखते है की ये सचिन तेंदुलकर का बेटा है इसी लिए सोचते है की सिफारिशी है लेकिन अर्जुन अपने दम पर खिलाड़ी है उसको मौका लगातार मिलना चाहिए@sachin_rt pic.twitter.com/nAz3C5Tkyv
— Coach Sunil Poonia (@Coach_Poonia7) May 17, 2024
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.
அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.
- 2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார்.
- வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் 156 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் ஐசிசி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
2-வது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த வனிந்து ஹசரங்கா 2-வது இடத்தில் உள்ளார். வங்காளதேச வீரர் சகிப் அல் ஹசன் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி 3 இடங்கள் பின் தங்கி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டாப் 10-ல் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் நேபாள் வீரர் சிங் ஐரீ 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மேலும் இந்திய ஆல் ரவுண்டரான அக்சர் படேல் மற்றும் மேக்ஸ்வெல் 18-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.
- இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றது.
- பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் ஸ்டெக்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை இழந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இன்னிங்சின் 8-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சர் அடிக்கும் முயற்சியில் விளாசினார். அதனை கேன் ரிச்சர்ட்சன் கேட்ச் பிடித்தார்.
இருப்பினும் இப்போட்டி முழுமையாக அடைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெற்றதால், பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் அது மேற்கூரையில் படாமல் ஃபீல்டரிடம் சென்றதையடுத்து அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டொய்னிஸ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இப்போட்டியை காண உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்சும் மைதானத்தில் இருந்தார். இந்த கேட்சைப் பார்த்த அவரும் என்ன நடந்தது என நம்பமுடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். ஸ்டோய்னிஸ் விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து ஷாக்கான ஜோகோவிச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.
- நட்சத்திர வீரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
- வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக அறிவித்து இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருக்கிறார்.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் இவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
35 வயதான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளின் போது ஸ்டோய்னிஸ் காயத்தில் அவதியுற்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். யுசுவேந்திர சாஹால் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக மேம்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை விட அவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
ஒருநாள் போட்டிக்கு முன் ஆஸ்திரேலியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா சசக்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் சதம் அடித்தார். இவர் 110 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது. இவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சசக்ஸ் அணி களம் இறங்கியது. சசக்ஸ் அணியின் சால்ட் 62 ரன்னும், பிஞ்ச் 45 ரன்னும், எவன்ஸ் 57 ரன்னும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். ஆனால், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்டோன் அகர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்த, சசக்ஸ் 220 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னருக்கு தடை விதிக்கப்பட்டப் பிறகு ஆஸ்திரேலியா விளையாடும் முதல் தொடர் இதுவாகும். ஆஸ்திரேலியா 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை மிடில்செக்ஸ் அணியை எதிர்கொள்கிறது.






