என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nicholas Pooran"

    • இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
    • நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.

    கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.

    • 29 வயதான நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்தார்.
    • அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி 2025 தொடருக்கான MI நியூயார்க் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக் கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலைியல் அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 லீக் தொடரில் எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2023ஆம் ஆண்டும் எம்எல்சி தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் 388 ரன்கள் விளாசி அதிக ரன்கள் விளாசி வீரராக திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் அடித்து எம்ஐ நியூயார்க் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    டி20 கிரிக்கெட்டில் பவர் ஹிட்டராக திகழ்ந்து வருகிறார். 2024ஆம் ஆண்டு அனைத்து டி20 போட்டிகளிலும் 170 சிக்சர்கள் விளாசினார். 2025 ஐபிஎல் சீசனில் முதன்முறையாக 500 ரன்களை கடந்தார். 40 சிக்சர்கள் விளாசினார்.

    2025 எம்எல்சி சீசன் நாளை தொடங்குகிறது. 13ஆம் தேதி எம்ஐ நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    • நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் பூரன் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

    அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.

    சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது

    • நடப்பு ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் 40 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    • அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் 40 சிக்சர்கள் அடித்து சீசனின் சூப்பர் சிக்ஸர்கள் விருதை நிக்கோலஸ் பூரன் வென்றார்.

    அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்து நிக்கோலஸ் பூரனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

    • மார்கிராம் 31 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.
    • நிக்கோலஸ் பூரன் 34 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் தொடக்கத்தில் அபாரமாக விளையாடியது. சாய் சுதர்சன் (56), சுப்மன கில் (60) அரைசதம் அடிக்க 12 ஓவரில் 120 ரன்கள் குவித்தது. அதன்பின் மளமளவென விக்கெட் இழக்க இறுதியாக 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் இல்லாததால் மார்கிராம் உடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரிஷப் பண்ட் 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார்.

    மார்கிராம் உடன் இணைந்து நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் லக்னோ 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 26 பந்தில் அரைசதம் கடந்த மார்கிராம், 31 பந்தில் 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 23 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் 6ஆவது போட்டி இதுவாகும். இதில் நான்கு அரைசதம் விளாசியுள்ளார்.

    தொடர்ந்து விளையாடிய நிக்கோஸ் பூரன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்திருந்தது.

    4அவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். லக்னோவின் ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆயுஷ் பதோனி 28 ரன்களுடனும், அப்துல் சமாத் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
    • நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    • லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    • மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
    • நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    • டி20 உலகக் கோப்பையில் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம்.
    • தோல்வி குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அரையிறுதிக்கு முந்தைய குரூப் 12 சுற்றுக்கு தரவரிசை அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வர வேண்டும்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறாததால், தகுதிச் சுற்றில் விளையாடியது. ஆனால் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது.

    தோல்வி குறித்து ஆராய பிரையன் லாரா உள்பட 3 பேர் கொண்டு குழுவியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அமைத்துள்ளது. இந்த நிலையில் டி20 அணி கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனது முடிவுக்கு இதுதான் காரணம் என பூரன் தெரிவித்துள்ளார்.

    தொடக்க சுற்றில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தனர். ஒரேயொரு வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

    பொல்லார்டு ஓய்வையடுத்து மே மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் சாதனை படைத்தார்.
    • ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் பல சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது.

    213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 23 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்துவிட்டது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 30 பந்தில் 61 ரன்களை குவித்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த நிகோலஸ் பூரன் 15 பந்தில் அரைசதம் அடித்து, 19 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவிக்க, கடைசி பந்தில் இலக்கை அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவே அதிவேக அரைசதம் ஆகும். ஒட்டுமொத்த ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை யூசுஃப் பதான் மற்றும் சுனில் நரைனுடன் பூரன் பகிர்ந்துள்ளார். 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

    ஐபிஎல்லில் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் 326.32 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் பூரன் 4-ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பாட் கம்மின்ஸ் (373.33) முதலிடத்திலும், ரெய்னா(348), யூசுஃப் பதான் (327.27) ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • நவீன்-உல்-ஹக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.


    மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் கூட சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் வேகப்பந்து வீச்சாளரை "தி மேங்கோ கை" என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.
    • நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    கயானா:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.

    பிரெண்டன் கிங், 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோமன் போவெல் 19 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 83 ரன்னும் (10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 37 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் 2 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றது. இதில் தோற்று இருந்தால் 20 ஓவர் தொடரை இழந்து இருக்கும். வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது என்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பேசி இருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு விளையாடினோம்.

    நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததால் எங்கள் பந்து வீச்சாளர்களை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக அக்ஷர் படேலுக்கு அவருக்கு உரிய 4 ஓவர்களையும் முழுமையாக வழங்க முடிந்தது.

    நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க நினைத்தால் எனது பந்தில் அடித்துக் கொள்ளட்டும் என்றே நான் காத்திருந்தேன். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    7 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இந்த திட்டம் தவறாக போகும் பட்சத்தில் அதற்கு நாங்கள் தான் பொறுப்பாகும். முதல் 7 பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை சரியாக செய்து விட்டால் 8-வது வீரருக்கு வேலை இருக்காது என்பதே எனது கருத்தாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மாவும் மிக சிறப்பாக விளையாடினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    ×