search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollard"

    • பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது
    • இதில் நேபாள வீரர் திபேந்திர சிங் டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.

    அல் அமிராட்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

    ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்
    • ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    அண்மையில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்.

    அப்போட்டியில் அவரது பந்துவீச்சை இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசினார்கள். அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில் இளம் வீரர் க்வேனா மபாகாவுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ட்வயன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன். கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் என்று உறுதியாக சொல்வேன். இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே. இது உனக்கு மிகப்பெரிய சவால். இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல கைரன் பொல்லார்ட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "தலையை உயர்த்து இளைஞனே. இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கெரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது. ஆனால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
    • இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் முதலாவது சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.

    இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. 6 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் கடந்த சீசனில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரஷித் கான் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • இந்த போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களை விளாசியுள்ளார்.
    • விராட் கோலி இந்த 4 சிக்சர்களின் மூலம் ஐபிஎல்லில் மொத்தமாக 227 சிக்சர்களை விளாசியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதியது. இதில் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

    முன்னதாக முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலியும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் ஆர்சிபி தோற்றது.

    நேற்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் டாப் 3 வீரர்களான விராட் கோலி, டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். விராட் கோலி 44 பந்தில் 61 ரன்களையும் மேக்ஸ்வெல் 29 பந்தில் 59 ரன்களையும், ஃபாஃப் 46 பந்தில் 79 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது. இதனை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது.

    இந்த போட்டியில் 4 சிக்சர்களை விளாசிய விராட் கோலி ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பொல்லார்டை பின்னுக்குத்தள்ளி 5-ம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி இந்த 4 சிக்சர்களின் மூலம் ஐபிஎல்லில் மொத்தமாக 227 சிக்சர்களை விளாசியுள்ளார்.

    ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள்:

    1. கிறிஸ் கெய்ல் - 357 சிக்ஸர்கள்

    2. டிவில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்

    3. ரோஹித் சர்மா - 241 சிக்ஸர்கள்

    4. டோனி - 232 சிக்ஸர்கள்

    5. விராட் கோலி - 227 சிக்ஸர்கள்

    • மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய வீடியோவை மும்பை அணி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அந்த வீடியோவில் அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

    • 35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.
    • ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    மும்பை:

    ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றன்.

    அதாவது 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.

    மும்பை அணியில் மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டனர். இதில் மும்பை அணியின் மிக முக்கிய வீரரான பொல்லார்ட்-ம் ஒருவர் என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல். 2010-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10-வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் தனது கரியரில் மிக மோசமான சராசரியை ( 14.40 ) வைத்திருந்தார். பந்துவீச்சிலும் பொல்லார்ட் 6 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

    35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். பொல்லார்ட் மட்டுமின்றி மேலும் 4 நட்சத்திர வீரர்களான ஃபெபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயங்க் மார்காண்டே, ஹிர்திக் சௌக்கின் ஆகிய 4 பேரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    பிராவோ வீசிய கடைசி ஓவரில் ‘வைடு’ கொடுக்காததால் நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பொல்லார்டுக்கு 23 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டதால் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் ரன் குவிக்க திணறியது. அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு கடைசி வரை நின்று ஸ்கோரை முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 19 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை வெயின் பிராவோ வீசினார். முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது பந்தை வலது பக்கம் வைடாக வீசினார். பொல்லார்டு பேட்டை சுழற்றினார். ஆனால் பேட் பந்தில் படவில்லை. பொல்லார்டு பேட்டை சுழற்றாமல் இருந்திருந்தால் அந்த பந்து வைடாக கருதப்பட்டிருக்கும்.

    3-வது பந்தையும் அதேபோல் பிராவோ வீசினார். இந்த முறை பொல்லார்டு பேட்டை சுழற்றவில்லை. பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பொல்லார்டு கடுங்கோபம் அடைந்தார். தனது பேட்டை மேல்நோக்கி வீசினார்.

    பின்னர் அடுத்த பந்தை பிராவோ வீச ஓடிவந்தார். பொல்லார்டு வலது பக்கம் நடந்து சென்றார். இதனால் பிராவோ பந்து வீசுவதை நிறுத்தினார். இரண்டு நடுவர்களுகம் பொல்லார்டு அருகில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 25 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    பொல்லார்டு மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது வழக்கம். ஆனால், யாரிடமும் பெரிய அளவில் வாக்குவாதம்  செய்யப்பட்டார். அவருக்கான ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவிப்பார். ஒருமுறை மைதானத்தில் அதிகமாக பேசக்கூடாது என நடுவர் எச்சரிக்க, வாயை டேப் வைத்து ஒட்டுக்கொண்டு விளையாடினார். நேற்றைய போட்டியில் பேட்டை வீசிய விதிமுறைக்கு மாறான என, ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
    அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #westIndies #CWC2019
    பார்படோஸ்:

    10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது. ஆனால் அணியில் யார்-யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் தாமதமாக உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் ஓரங்கட்டப்பட்டார். 39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.



    வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:- ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ். #westIndies #CWC2019
    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 10 சிக்சருடன் 83 ரன்கள் குவித்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்த மும்பை பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். #IPL2019 #Pollard
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த திரிலிங்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. இதில் லோகேஷ் ராகுலின் (100 ரன்) சதத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த சமயம் விசுவரூபம் எடுத்த மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் கீரன் பொல்லார்ட் ரன்மழை பொழிந்தார். அவரது அசுரத்தனமான மட்டையின் சுழற்சி, ஆட்டத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பியது. வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 4 ரன் தேவை என்ற நிலை வந்த போது பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டபோது அல்ஜாரி ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து மும்பை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான்.

    ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிறப்பாக செயல்பட எனக்கு வலுவான சக்தியும், கடினமான கட்டத்தில் போராடும் துணிச்சலும் அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது என்றாலே எனக்கு கொண்டாட்டம் தான். அதனால் தான் கொஞ்சம் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் திரும்பவில்லை. அதனால் அஸ்வின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும், அவரது ஓவர்களில் மட்டும் 5-6 சிக்சர்கள் விளாசி ரன்ரேட் தேவையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து பொறுமையுடன் செயல்பட வேண்டி இருந்தது. இந்த ஆடுகளம், பந்து வீச்சுக்கு கடினமானது. பேட்டிங்குக்கு எளிதானது. ஒவ்வொரு சிக்சரையும் அடிக்கும் போது உற்சாகம் பீறிட்டது. பந்தை ரசிகர்கள் பகுதிக்கு விரட்டுவதை பார்ப்பதே தனி சந்தோஷம் தான்.

    பஞ்சாப் அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் கடைசி 2-3 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். இங்கு, இந்த இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். என்னை பொறுத்தவரை எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியமே என்று நம்பக்கூடியவன் நான். அதற்கு ஏற்ற வகையில் ‘பவர்-பிளே’யில் எங்களது பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். நானே இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்.

    மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் நாங்கள் 2 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் அவர் உடல்தகுதியுடன் இருப்பார். அவரிடம் கேப்டன்ஷிப்பை திரும்ப வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்குரிய இந்த ஆட்டநாயகன் விருதை என் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.

    இவ்வாறு பொல்லார்ட் கூறினார்.

    பொல்லார்ட்டிடம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதிலில், ‘வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் களத்தில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய குழப்பம் நிலவியது. அவர்கள் வைத்திருந்த விரும்பத்தகாத வீரர்களின் பட்டியலில் நானும் (2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை) ஒருவன். ஆனால் என்னை பொறுத்தவரை எப்போதும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்தாலும் அதிக ரன்கள் எடுக்கவே முயற்சிக்கிறேன்.

    சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேர்வு கமிட்டிக்கு புதிய தலைவர் வந்திருக்கிறார். அதனால் தேர்வு கமிட்டி என்ன செய்யப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும். எனக்கு இப்போது வயது 31. கிறிஸ் கெய்ல் 39 வயதிலும் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுகிறார். என்னாலும் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். புதிய தேர்வு குழு இதை எல்லாம் கவனத்தில் கொள்வார்களா? என்பதை பார்ப்போம். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கிறது’ என்றார்.

    தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘எங்களது பீல்டிங் மெச்சும்படி இல்லை. அனேகமாக நாங்கள் இன்னும் சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன். ஆனால் இந்த மைதானத்தில் இவ்வளவு ஸ்கோரை வைத்து கொண்டும் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. 10-12 ஓவர் வரை எங்களது ரன்ரேட் 10 ரன்கள் வரை இருந்தது. அதன் பிறகு சில ஓவர்கள் ரன்வேகம் தளர்ந்தது. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பொல்லார்ட்டின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் எங்களது வெற்றி வாய்ப்பை பறித்து விட்டார்’ என்றார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறிய அஸ்வின், காயத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்த ஆட்டத்தில் கெய்ல் ஆடுவது சந்தேகம் தான். #IPL2019 #Pollard

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, பொல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. #INDvWI #Bravo #Pollard #Narine
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இதைதொடர்ந்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் ஒருநாள் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 25 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது

    வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை இதனால் அவர்களின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் இனி கேள்விக்குறியே. இதேபோல் 20 ஓவர் போட்டி அணியிலும் அவர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த 3 பேரும் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற மிகச் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பிராவோவும் பொல்லார்ட்டும் கரீபியன் பிரியர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்கள்.



    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் பிராவோவுக்கும் ஏற்கனவே ஊதிய விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் ஒரு நாள் போட்டி அணியில் விளையாடி 4 ஆண்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 ஆண்டுகளும் ஆகிறது.

    ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் அறிவிக்கப்படும். #INDvWI #Bravo #Pollard #Narine
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    தாமஸ்

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு வீசிய ஓரே ஓவரில் டேரன் பிராவோ ஐந்து சிக்ஸ் உள்பட 32 ரன்கள் குவித்து அசத்தினார். #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த லூசியா 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 15  ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி 5 ஓவரில், அதாவது 30 பந்தில் 85 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மெக்கல்லம், டேரன் பிராவோ களத்தில் இருந்தனர்.



    16-வது ஓவரை பொல்லார்டு வீசினார். டேரன் பிராவோ பந்தை எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளிலும் இமாலய சிக்ஸ் விளாசினார் பிராவோ. ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். பந்து பேட்டில் சரியாக படாததால் மிட்ஆஃப் திசையில் சென்றது. அதில் இரண்டு ரன்கள் கிடைத்தது. சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்தார். ஆனால், இரண்டு ரன்களே கிடைத்தது.

    அடுத்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார் டேரன் பிராவோ. பொல்லார்டு ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அடுத்த 24 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 53 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்.
    ×