search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Washington"

    • வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது
    • இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது

    இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது.

    இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன.

    ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது.

    சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.

    2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும்.

    எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு.

    மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம்.

    புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்துள்ளார். அமெரிக்க ராணுவ மந்திரியுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்தடைந்தார்.



    வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.

    அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    சமீபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் 20-வது மாநிலமாக வாஷிங்டனிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. #DeathPenalty
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    அமெரிக்காவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதில் வாஷிங்டன் 20-வது மாநிலம் ஆகும். #DeathPenalty
    அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    நியூயார்க்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டிரம்ப் - கிம் சந்திப்பின் போது 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகள் குழுவும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. 

    சீன அதிபருடனான சந்திப்புக்கு பிறகு கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுபாடுகள் தென்படுகின்றன. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். #Trump #KimJongUn  
    ×