என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jobaidan"

    • வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார்.
    • நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:-

    பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம், கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார். நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார். பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன்.

    நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீரா தாண்டன் தற்போது அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் உள்ளார்.

    • இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
    • ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜி.20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது.

    ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் அவர் 10-ந்தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜோபைடன் தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்றார். அதிபர் ஜோபைடனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஜோபைடன் ஏற்று கொண்டார்.

    இந்தியாவில் ஜி.20 மாநாட்டில் பங்கேற்பதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருப்பதாக ஜோபைடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.

    வாஷிங்டன்:

    ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந்தேதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜோபைடன் 7-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 8-ந்தேதி இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.

    9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அதிபர் ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

    ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
    • தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.

    இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
    • உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.

    அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.

    இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

    • குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
    • மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். பிலடெல்பியா விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடை பெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றார்.

    இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் 4-வது உச்சிமாநாடு, வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.


    இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா. ஆஸ்தி ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்கள் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மை, உக்ரைன் மற்றும் காசா போர் பிரச்சனைக்கு அமைதித் தீா்வைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.

    மேலும், சுகாதாரம் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வளரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்கு வரத்து தொடா்புகள், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவது குறித்தும் விவா தித்தனர்.

    பதற்றமும் பல்வேறு விதமான பிரச்சினைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் குவாட் உச்சி மாநாடு நடக்கிறது. ஜன நாயக அடிப்படையில் குவாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தோ-பசிபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் குவாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக குவாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரும் விதிகள் அடிப் படையிலான சர்வதேச ஒழுங்கு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒரு மைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான தீர்வு ஆகியவற்றை ஆதரிக்கிறோம்.

    சுதந்திரம், திறந்த, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் நமது முன்னுரிமை என்றார். பின்னர் ஜோபைடன், புமியோ கிஷிடா. அந்தோணி அல்பானீஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் வர்த்தகம், பாது காப்பு, விண்வெளி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    குவாட் மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி நியூயார்க்குக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மோடி, நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் ஐ.நா.வின் எதிர்காலத் துக்கான உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார்.

    • எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
    • கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்.

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.


    இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.

    ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது' என்றார்.

    • சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
    • சட்டத்தை மீறி உள்ளார் என்று ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

    வாஷிங்டன்:

    உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

    அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரித்து உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது அதே பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணியாற்றினார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அதில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 1995-ம் ஆண்டு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக படிப்பை நிறுத்தி விட்டு ஜிப்-2 என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். இது தான் அவரது முதல் வேலை. இந்த காலகட்டத்தில் அவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து உள்ளார்.

    1997-ம் ஆண்டு அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தது சட்டவிரோதமாகும் என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது உலகில் மிகப்பெரிய பணக்காரர் இங்கு ஒரு சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.

    அவர் மாணவர் விசாவில் வந்த போது பள்ளியில் தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் இல்லை. அவர் சட்டத்தை மீறி உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

    எலான் மஸ்க் விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.

    இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.


    இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. 52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    ×