search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்

    • ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.

    வாஷிங்டன்:

    ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந்தேதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜோபைடன் 7-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 8-ந்தேதி இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.

    9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அதிபர் ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

    ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×