என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலெக்ஸ் ஹேல்ஸ்"

    • அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்

    அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.

    டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    • அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார்.

    ஹேல்ஸ் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடினார். மூன்று வருடங்களுக்கு பிறகு அலெக்ஸ் போட்டிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அலெக்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

    ஓய்வு குறித்து ஹேல்ஸ் கூறியதாவது:-

    அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இப்போது அந்த பயணத்தைப் பற்றி சிந்தித்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்ற வாழ்க்கை மற்றும் இங்கிலாந்தின் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருந்த தருணங்கள் உண்மையில் திருப்தி அளிக்கிறது.

    ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த இரண்டு ஆட்டங்களிலும் மூன்று புள்ளிகளை எட்ட முடிந்தது.

    டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமீம் இக்பால் வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்று டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
    • அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக தடைக்கு உள்ளானவர்.

    வங்கதேசத்தில் வங்கதேசம் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் ரங்க்பூர் ரைடர்ன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின் வீரர்களை கைக்கொடுப்பார்கள். அப்போது தமீம் இக்பால் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கைக்கொடுக்கும்போது இன்னும் போதைப்பொருள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த ஹேல்ஸ் தமீம் இக்பாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்ற இருவரும் கைகலப்பில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. இரண்டு அணி வீரர்களும் அவர்களை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் கைலகப்பு தவிர்க்கப்பட்டது.

    வங்கதேச அணியில் இருந்து ஓய்வு பெற்ற தமீம் இக்பால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் பார்ச்சூன் பரிசால் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் தடை செய்யப்பட்டிருந்தார். இதை மனதில் வைத்துதான் தமீம் இக்பால் இவ்வாறு கேட்டுள்ளார்.

    ×