என் மலர்
நீங்கள் தேடியது "கரீபியன் பிரீமியர் லீக்"
- அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
கயானா:
6 அணிகள் பங்கேற்றிருந்த 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக இப்திகார் அகமது 30 ரன்கள் அடித்தார். டிரின்பாகோ தரப்பில் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலின் முன்ரோ (23 ரன்கள்), அலேக்ஸ் ஹேல்ஸ் (26 ரன்கள்) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர். பூரன் ஒரு ரன்னிலும், பிராவோ 11 ரன்களிலும், ரசல் கோல்டன் டக் ஆகியும் ஏமாற்றினர்.
இதனால் தடுமாற்றத்திற்குள்ளான அந்த அணியை சுனில் நரைன் (22 ரன்கள்), பொல்லார்டு (21 ரன்கள்) மற்றும் அகீல் ஹொசைன் (16 ரன்கள்) கரை சேர்த்தனர். 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதையும், பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு 8.83 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ரூ. 5.82 கோடியும் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 2.21 கோடி, 0.88 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
- நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.
- பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
- கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர், கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 38 வயதில் இந்த அடி அடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கூட பேட்டராக தேர்வு செய்யலாம் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
- இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும்.
இதனையடுத்து களமிறங்கிய ஹோல்டர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே பிளெட்சர் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக டிரின்பாகோ முன்னேறி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






