search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvMI"

    • 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்
    • ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    அண்மையில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார்.

    அப்போட்டியில் அவரது பந்துவீச்சை இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசினார்கள். அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில் இளம் வீரர் க்வேனா மபாகாவுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ட்வயன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன். கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் என்று உறுதியாக சொல்வேன். இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே. இது உனக்கு மிகப்பெரிய சவால். இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல கைரன் பொல்லார்ட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "தலையை உயர்த்து இளைஞனே. இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். கெரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது. ஆனால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது" ஏன்னு பதிவிட்டுள்ளார்.

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது
    • 49 ரங்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. இதற்கு முன்பு பெங்களூரு அணி 263 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

    சொன்னபோனால் இந்த போட்டிக்கு முன்பு வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற 2 சாதனையையும் பெங்களூரு அணி தான் வைத்திருந்ததது. 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு, பெங்களூருவில் அதிகபட்ச ஸ்கோர் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பெங்களூருவில் குறைந்த பட்ச ஸ்கோர் சாதனையை முறியடிக்கவே முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    அதே போல், ஐபிஎல் வரலாற்றில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் பெண்கள் பிரிமியர் லீக் ஆரம்பித்த 2-வது வருடத்திலேயே பெங்களூரு அணி கோப்பையை தட்டி தூக்கியது. அந்நேரமும் பெங்களூரு அணியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • அபிஷேக் சர்மா 22 பந்தில் 68 ரன்கள் விளாசினார்.
    • 3 பவுண்டரி, 7 சிக்ஸ் விளாசிய அவர், ஐதராபாத் அணிக்காக அதிவே அரைசதத்தை பதிவு செய்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இலக்கை துரத்தியபோது 209 ரன்கள் தேவை என்ற நிலையில் 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    நேற்று மும்பை அணிக்கெதிராக 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. இரண்டு போட்டிகளிலும் 23 வயதேயான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.

    நேற்று 22 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். மேலும் ஐதராபாத் அணிக்காக அதிவேக (18 பந்தில்) அரைசதத்தை பதிவு செய்தார்.

    இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் டிராவிட் ஹெட் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் (22 பந்தில்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

    தனது அதிரடிக்கு அணி நிர்வாகம் வழங்கியுள்ள சுதந்திரம்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உண்மையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் என்று நான் உணரவில்லை. வழக்கம்போல் நான் அரைசதம் அடித்ததும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவுட்டாகி வெளியே வந்த பின்னர்தான் அதிவேக அரைசதம் என உணர்ந்தேன். அதை நான் ரசித்தேன்.

    இந்த போட்டிக்கு முன்னதாக பேட்ஸ்மேன் அனைவருக்கும் மிகவும் எளிதான தகவல் பரிமாறப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த தகவல், ஒவ்வொருவரும் களத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அற்புதத்தை (தங்களுக்குள் இருக்கும் திறமையான ஆட்டம்) வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நீங்கள் இதை பெறும்போது, அது மிகப்பெரிய நேர்மறையான தகவலாக இருக்கும். இது உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்தவரான டிராவிட் ஹெட் உடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அவருடன் இணைந்து பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன்.

    இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

    • முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது.
    • மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தன- கம்மின்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இல்லையா என்ன? என கேட்டுக்கொண்டார். நாங்கள் பந்து வீசி முடிக்கும் வரை, போட்டி மிகவும் நெருக்கமானதாகவே சென்னறது. மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தது. பந்து மைதானத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் இறுதியாக சிறப்பான வகையில் ஆட்டத்தை முடித்தோம்.

    அபிஷேக் சர்மா ஆட்டம் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் ஐபிஎல் தொடரில் நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது. ஆனால், நாங்கள் நேர்மறையான, ஆக்ரோசமான ஆட்டத்துடன் போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினோம். சொந்த மைதானத்தில் சூழ்நிலை அற்புதமாக இருந்தது. நம்பமுடியாத வகையில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    டாஸ் சுண்டப்படும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடிக்கும் என்று உண்மையிலான நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. 277 என்பது விசயம் அல்ல, நீங்கள் மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தால், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள், அவ்வளவுதான். அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட நிலையில், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, பந்து வீசுவது மிகவும் கஷ்டம்.

    நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சில விசயங்கள் செய்திருக்கனும். நாங்கள் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம். பாடம் கற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு ஹர்திப் பாண்ட்யா தெரிவித்தார்.

    • பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).
    • ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான்.

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    1. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் (277-3).

    2. பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).

    3. ஒரு இன்னிங்சில அதிக சிக்ஸ் அடித்ததில் மும்பை இந்தியன்ஸ் 20 உடன் 2-வது இடம். ஆர்சிபி 21 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 20 சிக்ஸ் அடித்துள்ளன.

    4. ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்த்து 38 சிக்ஸ் அடித்துள்ளன.

    5. ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்ந்த 38 சிக்ஸ் அடித்துள்ளன. இதற்கு முன்னதாக 2018-ல் ஆர்சிபி-சிஎஸ்கே அணிகள், 2020-ல் ஆர்ஆர்-சிஎஸ்கே அணிகள், 2023-ல் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் விளையாடிய போட்டிகளில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

    6. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மொத்தம் 523 (277+246) ரன் அடிக்கப்பட்டுள்ளது.

    7. ஆண்கள் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்னும் இதுவாகும். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 517 ரன் அடிக்கப்பட்டிருந்தது.

    8. ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது பேட்டிங் செய்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 2020-ல் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்ஆர் 226 ரன் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

    9. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

    10. இரு அணிகளிலும் நான்கு பந்து வீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

    11. முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 148 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவரில் அதிக ரன் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 141 ரன் அடித்து 2-வது இடத்தில் உள்ளது.

    • 2021-ல் அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 131 ரன்கள் அடித்திருந்தது.
    • 2014-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் அடித்திருந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் 2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடியது. அறிமுக வீரரான மபாகா 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் டிராவிட் ஹெட் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 5-வது ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள் விளாசினார். ஒரு விக்கெட்டை இழந்தாலும் 13 ரன்கள் எடுத்தது.

    5-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி அடிக்க 23 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.

    7-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 3 சிக்ஸ் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. 8-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தது. 9-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மபாகா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இதனால் 20 ரன்கள் கிடைத்தது. மொத்தமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓவரில் 148 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் இதற்கு முன் 2021-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் குவித்துள்ளது. 2014-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் 131 ரன்கள் எடுத்துள்ளது.

    2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெக்கான் சார்ஜர்ஸ் 130 ரன்கள் எடுத்துள்ளது. 2016-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி 129 ரன்கள் எடுத்துள்ளது.

    ×