search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smith"

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.

    அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

    2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.

    சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.

    அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.

    பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • இங்கிலாந்து சமீபத்தில் 13 போட்டிகளில் 11-ல் வெற்றி கண்டுகள்ளது
    • பேட்ஸ்மேன்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் நோக்கம்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் பாரம்பரியமான தொடர். இந்தத் தொடரை இழக்க இரு அணிகளும் விரும்பாது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், மெக்கல்லம் பயிற்சிலும் இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' என்ற பயமறியாமல் அதிரடியாக விளையாடி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கும் அணுமுறையை மேற்கொண்டுள்ளது.

    இதன்காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 13 டெஸ்ட் போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைபிடிக்குமா? என ரசிகர்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் 'பாஸ்பால்' ஆட்டம் குறித்து ஸ்மித் கூறியதாவது:-

    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எங்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி பாஸ்பால் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எப்போதும் இதை நான் கூறி வருகிறேன். உண்மையிலேயே அதை பார்க்க ஆர்வமாக இருக்கும். கடந்த 12 மாதங்களாக தங்களது அணுகுமுறையை மாற்றி சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்து ரசிப்பேன் என்பதை உறுதியாக கூறுவேன்.

    ஆனால், எங்களுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹேசில்வுட் காயத்தால் ஓய்வில் உள்ளார். காயம் குணமடைந்தால் அணியில் இணைவார். இல்லையெனில் ஸ்காட் போலண்ட் அவருக்குப் பதிலாக களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் போலண்ட்தான் களம் இறங்கியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சராசரி 60-க்கு மேல் ஆகும்
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 சதங்கள் விளாசியுள்ளார்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் சதம் விளாசினார். இது அவரின் 31-வது சதம் ஆகும்.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்மித் குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று வரும்போது, இந்த தலைமுறையில் ஸ்மித் சிறந்த வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தவொரு வீரரும் அவரை நெருங்க முடியும் என நான் நினைக்கவில்லை.

    அவருடைய திறமை, போட்டிக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடுவதில் அவருக்கு இணை எவரும் இல்லை. அவருடைய சாதனை அவரைப் பற்றி பேசும். 85 முதல் 90 போட்டிகளில் விளையாடி 60-க்கு மேல் சராசரி வைத்திருப்பது நம்ப முடியாதது.

    இவ்வாறு விராட்  கோலி குறிப்பிட்டிருந்தார்.

    விராட் கோலி கூறியதுபோல் சிறந்த வீரர் என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலியா 76 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஸ்மித் 4-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் குவித்தது. ஸ்மித் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    469 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆன நிலையில், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் உள்ளது.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர்.

    தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.



    ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார். #CWC2019
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத்தடை தற்போது முடிவடைந்ததால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.

    காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக ஐபிஎல் மிகவும் உதவிகரமாக இருந்தது என ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். #IPL201 #ஸ்மித்
    ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

    இந்த தடையால் ஸ்மித்தால் சரியாக விளையாட முடியவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு டி20 லீக்கில் விளையாடினார். ஆனால் காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடும்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த உடற்தகுதியுடன் விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.



    இந்நிலையில் ‘‘ஐபிஎல் தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக உதவிகரமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில் ஐபிஎல், சிறந்த வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கொடுத்தது. டி20 கிரிக்கெட் எப்போதுமே 50 ஓவருக்கு தயாராக உதவும் என்று நினைப்பவன் நான். டி20-யின் நீட்டிக்கப்பட்ட ஆட்டம்தான் 50 ஓவர் கிரிக்கெட்’’ என்றார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய சுமித், வார்னரின் தண்டனை காலம் முடிவடைந்ததை யொட்டி அவர்கள் மீண்டும் தங்களது ஐபிஎல் அணிகளோடு இணைந்து கொண்டனர். #IPL2019 #Smith #Warner
    புதுடெல்லி:

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை இந்த மாதம் முடிகிறது. இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்களோடு துபாயில் பயிற்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் இருவரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள். இதற்காக இருவரும் தங்களது அணிகளோடு இணைந்து கொண்டனர். சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் வார்னர் சன்ரைசஸ் ஐதராபாத் அணியிலும் ஆடுவார்கள். #IPL2019 #Smith #Warner
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஹசிம் அம்லா 32 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். #hashimAmla #Smith
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ரன் எடுத்தார்.

    4-வது ரன்னை எடுத்த போது அவர் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். சுமித்தை அவர் முந்தினார். அம்லா 124-வது டெஸ்டில் 9282 ரன் எடுத்துள்ளார். சுமித் 9253 (116 டெஸ்ட்) 3-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். காலிஸ் 13,206 ரன்னுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார். #hashimAmla #Smith
    டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு இடம் கிடைக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்துள்ளது. இந்த தடைக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்கள் மீதான தடைக்காலம் முடிவிற்கு வரும்.

    இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

    விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.



    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரத்தில் பால் டேம்பரிங் குறித்த ஸ்மித், பான்கிராப்ட் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரிக்கி பாண்டிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.
    பாம் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதமும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தடை விதித்தது.

    மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

    இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

    பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
    ×