முந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்

ஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
Published on

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்க இருக்கிறது.

2018-2019 சீசனில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணிக்கு மூன்று பேர் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த முறையை காட்டிலும் இந்த முறை ஆஸ்திரேலியா முக்கியமான மூன்று வீரர்களை கொண்டுள்ளது. அவர்கள் வார்னர், ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோரை பெற்றுள்ளனர்.

கடந்த முறையை காட்டில் இந்தத் தொடருக்கான அணி மிகவும் சிறந்தது. உங்கள் அனுபவ வீரர்கள் இருவர் இல்லாதபோது, திடீரென்று அந்த வெற்றிடத்தை உணரலாம். அதைத்தான் ஆஸ்திரேலியாவும் கடந்த சீசனில் உணர்ந்தது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com