search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dwayne Bravo"

    • டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர்.
    • டோனி மனைவி சாக்‌ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள்.

    ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-ம் தேதி பங்கேற்று வந்தார் கேப்டன் எம்எஸ் டோனி. சக வீரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகுவதோடு, பயிற்சி முகாமிலேயே ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் திட்டங்களை ஆலோசிப்பார். அதேபோல் இளம் வீரர்களை புரிந்து கொள்ளும் காலமாக இந்த மாதம் அமையும்.

    ஆனால் முதல்முறையாக சிஎஸ்கே பயிற்சி முகாமில் டோனி தாமதமாக பங்கேற்கிறார். இதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் ஜூலை 12-ல் திருமணம் நடக்கவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் டோனி மற்றும் பிராவோ தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளனர். அவருக்கு அருகே மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.

    அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.


    மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ தொடர்புடைய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த ராயுடு தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமே வழங்கி உள்ளது. அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.

    இப்படி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த லீக் போட்டியில் விளையாடும் அந்த வாய்ப்பு குறித்து அம்பத்தி ராயுடுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

    அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர். அதனைத்தவிர்த்து மீதமுள்ள வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.

    அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35 (18) ஜோஸ் பட்லர் 95 (59) கேப்டன் சஞ்சு சாம்சன் 66* (38) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.

    அதை தொடர்ந்து ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

    4 விக்கெட்களை ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

    சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 183 விக்கெட்களை எடுத்து அதை சமன் செய்துள்ள சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் புதிய சாதனையும் படைத்துள்ளார்.

    அந்தப் பட்டியல்:

    1. சாஹல் : 183* (142 போட்டிகள்)

    2. பிராவோ : 183 (161 போட்டிகள்)

    3. பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்)

    4. அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்)

    5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்)

    • எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள்.
    • பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மேற்கு இந்திய தீவை தேர்ந்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, நசென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தமது ஓய்வு முடிவினை அவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள பிராவோ டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று இன்று அறிவிக்கிறேன். இது ஒரு சிறந்த பயணம், நிறைய ஏற்ற தாழ்வுகளுடன் இருந்தது. அதே நேரத்தில், நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மற்றும் முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன்.

    ஆனால் அதே நேரத்தில் பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை அணியில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் எனது அழைப்பு இப்போது உள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 61 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தனது 545-வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை பிராவோ கைப்பற்றியுள்ளார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளார்.

    லண்டன்:

    லண்டனில் 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான பிராவோ டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு பிராவோ சொந்தக்காரரானார். அவரை தவிர வேறு எந்தவொரு பவுலரும் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை கூட இன்னும் தொடவில்லை.

    அவருக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் 466 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பவுலராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் உள்ளார்.

    பிராவோ ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 38 வயதான பிராவோ டி20 கிரிக்கெட்டில் கடந்த 2006 முதல் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணிகளில் அவர் விளையாடி உள்ளார்.

    தனது 545-வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்கில் விளையாடி 522 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவித்துள்ளார்.

    அபுதாபி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ. தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

    அவர் இதுவரை நடந்த ஏழு 20 உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார். இதில் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    38 வயதான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டி, 164 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    ஓய்வு முடிவு குறித்து பிராவோ கூறியதாவது:-

    ஓய்வு பெற நேரம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன். நான் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை பெற்றுள்ளேன். 18 ஆண்டுகளாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன்.

    இதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கரீபியன் மக்களையும், அந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தியதில் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒயிட்பால் வடிவ கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ-வை மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும். 2018-19 சீசன் விரைவில் தொடங்குகிறது.

    பிக் பாஷ் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடினார்.



    இந்நிலையில் இந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    பிராவோ மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்-ரவுண்டர் பிராவோ எழுதி பாடிய 'வி ஆர் த கிங்ஸ்' பாடல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #yellowarmy #CSK #DwayneBravo #WeAreTheKings
    சென்னை:

    ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் பெற்ற வெற்றியை ரசிகர்கள் விமர்சையாக கொண்டி வருகின்றனர். இந்த அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சிறப்பாக விளையாடினார்.


    அவர் போட்டியின் போது நடனமாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஓய்வறையில் சக வீரர்களுடன் விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிராவோ நேற்று டுவிட் செய்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    'வி ஆர் த கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்ற இந்த பாடலை பிராவோ தானே எழுதி பாடியுள்ளார். டோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றவர்களை பெருமைப்படுத்தி பாடப்பட்டுள்ள இந்த பாடலை ரசிகர்களுக்காக வெளியிட்டதாக பிராவோ தெரிவித்தார். #yellowarmy #CSK #DwayneBravo #WeAreTheKings

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பின் மைதானத்தில் டோனி, பிராவோ இடையே நடைபெற்ற போட்டி வைரலாக பரவி வருகிறது. #IPL2018 #CSK #MSDhoni #Bravo
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.


    இறுதி போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது டோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றது. இருவரும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மூன்று ரன்கள் ஓட முடிவு எடுத்தனர். யார் முதலில் வருவார்கள் என இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இதனை மற்றவர்கள் கண்டு ரசித்தனர்.

    இருவரும் வெற்றி பெற வேகமாக ஓடினர். இறுதியில் கேப்டன் கூல் டோனி முதலில் கோட்டை தொட்டு வெற்றி பெற்றார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் டோனியின் வேகத்தை பிராவோவால் ஈடுசெய்ய முடியவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர். #IPL2018 #CSK #MSDhoni #Bravo
    தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றோம், இந்த வெற்றியை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பானது. இது ஒரு சிறப்பான சூழ்நிலை. நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து விளையாடியது கிடையாது.



    ஒரு போட்டிக்குப் பின்னர் நாங்கள் சென்னையில் இருந்து புனேவிற்குச் சென்றோம். பெரும்பாலான வீரர்களுக்கு இது முதல்முறை. நாங்கள் போட்டியின்மீது கவனம் செலுத்தி, அதை செய்தோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை விட சிறந்தது ஏதும் இல்லை’’ என்றார்.
    ×