என் மலர்
நீங்கள் தேடியது "ரோவ்மன் பவல்"
- டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலை நீக்கி ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ கூறியதாவது:-
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.
ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும்.
நமது டி20 அணி 9-வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பவல், அணியை தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள்.
என்று பிராவோ விமர்சித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இதுவரை 37 போட்டிகளில் விளையாடி 19 வெற்றிகள் 17 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம்.
- அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதலில் தடுமாற்றத்தை கொடுத்த இந்திய அணி பூரனின் அதிரடியை சமாளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கூறியுள்ளார்.
இந்த வெற்றிக் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறுகையில்:-
2016-ம் ஆண்டுக்கு பின் நாங்கள் டி20 தொடரில் வெற்றிபெறவில்லை. அதனால் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம்.
எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம். அதற்கு கடுமையான வெயில் தான் காரணம். அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம். சாஹல், குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை கட்டுப்படுத்த எங்களுக்கு இடது கை வீரர்கள் தேவை. பூரனும் ஹெட்மேயரும் அதை எதிர்கொள்வது முக்கியம். அதனை களத்தில் செயல்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






