search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West indies"

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்படோஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    உலகக் கோப்பை முடிந்து பார்படோஸில் இருந்து இன்றிரவு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியா திரும்ப ஆயத்தமான இந்திய அணி வீரர்கள், ஊடகவியாலாளர்கள் குழு பார்படோஸில் சிக்கியுள்ளது.

    • கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
    • கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

    இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

    ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

    இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி  டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    • டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
    • டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இப்போட்டியில் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார் நிகோலஸ் பூரன். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசியவர் என்ற கெய்லின் சாதனையை பூரன் முறியடித்துள்ளார்.

    2012 ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.

    2024 டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

    1. 2024 - நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 227 ரன்கள் - 17 சிக்ஸர்

    2. 2012 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 222 ரன்கள் - 16 சிக்ஸர்

    3. 2012 - ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 249 ரன்கள் - 15 சிக்ஸர்

    4. 2012 - மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 230 ரன்கள் - 15 சிக்ஸர்

    5. 2016 - தமீம் இக்பால் (வங்காளதேசம்) - 295 ரன்கள் - 14 சிக்ஸர்

    6. 2021 - பட்லர் (இங்கிலாந்து) - 269ரன்கள் - ௧௩ சிக்ஸர்

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29 ரன்களும் நிதிஷ் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், ராஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
    • இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-

    478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)

    423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)

    422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)

    420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)

    390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)

    இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)

    32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்

    26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து

    25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா

    24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா

    இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-

    116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014

    101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021

    99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012

    87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024

    86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022

    • நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.

    பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.
    • 91 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது.

    இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)

    நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)

    இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)

    தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

    இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)

    மேலும் இந்த போட்டியில் நிக்கோளஸ் பூரன் மற்றும் சார்லஸ் இணைந்து ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். உமர்சாயின் ஓவரில் 10 எக்ஸ்ட்ராக்கள் (5 வைடுகள், ஒரு நோ-பால் மற்றும் நான்கு லெக்-பைகள்) அடங்கும்.

    ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:-

    36 - யுவராஜ் சிங் (இந்தியா) எதிராக ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), டர்பன், 2007

    36 - கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அகிலா தனஞ்சய (இலங்கை), கூலிட்ஜ், 2021

    36 - ரோஹித் சர்மா & ரிங்கு சிங் (இந்தியா) எதிராக கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்), பெங்களூரு, 2024

    36 - திபேந்திர சிங் ஐரி (நெதர்லாந்து) எதிராக கம்ரன் கான் (குவைத்), அல் அமேரத், 2024

    36 - நிக்கோலஸ் பூரன் & ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செயின்ட் லூசியா, 2024

    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.
    • 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகெயில் ஹொசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    • டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
    • இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

    இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    ×