என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி ரத்து செய்யப்பட்டால்... அரையிறுதிக்கு தகுதி பெறுவது யார்?
    X

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி ரத்து செய்யப்பட்டால்... அரையிறுதிக்கு தகுதி பெறுவது யார்?

    • வரும் 1-ந் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
    • இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

    வரும் 1-ம் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    போட்டி ரத்தானால், தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் ரன் ரேட்டில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இருப்பினும் கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×