என் மலர்
நீங்கள் தேடியது "Italy"
- காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு இத்தாலிய யோகா குழுவினர் வருகை தந்தனர்.
- பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.
மதுரை
இந்தியாவில் பின்பற்றப்படும் யோகா, தியானம், நல வாழ்வு ஆகியவற்றை கற்றுக் கொண்டு இத்தாலிய மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கான பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.
இந்த குழுவினர்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தனர். காந்திய சிந்தனைகள் குறித்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். காந்தி நினைவு அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட யோகா குழுவினர் அந்த அருங்காட்சியகத்திற்கும் இத்தாலி நாட்டிற்குமான தொடர்புகள் வருங்காலத்தி லும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த னர்.
இதற்காக காந்திய கலாசார பரிமாற்றம் தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
- நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறு தொழிற்சாலைகளை அமைத்து சீஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன
- கியாகோமோவின் உடலை கண்டுபிடிக்கவே சுமார் 12 மணிநேரம் ஆனது
சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான உணவுப்பொருள்.
ஐரோப்பாவின் சீஸ் தேவைகளில் பெரும்பகுதியை இத்தாலி பூர்த்தி செய்கிறது. கிரானா படானோ மற்றும் பார்மிஜியானோ ரெகியானோ எனும் சீஸ் வகைகள் இத்தாலியில்தான் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிலில் அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறு தொழிற்சாலைகளை அமைத்து ஈடுபட்டு வருகின்றன.
அங்கு கிரானா படானோ சீஸ் தயாரிப்பில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்பவரின் குடும்பமும் இந்த தொழில் செய்து வந்தது.
இவரது சீஸ் தொழிற்சாலையின் குடோன் இத்தாலியின் பெர்காமோ நகருக்கு அருகே ரொமானோ டி லொம்பார்டியா பகுதியில் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 50 கிரானோ படானோ பாலாடைக்கட்டி அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சுமார் 33 அடி வரையில் உயரம் உள்ள உலோக ரேக்குகளில் இவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை 3 தினங்களுக்கு முன் கியாகோமோ ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு அலமாரி உடைந்தது. உடைந்த அலமாரி மற்றொரு அலமாரியை தள்ளி, ஒரு சங்கிலி தொடர் போல் ஒன்றின் மேல் ஒன்றாக அவர் மேல் அலமாரியிலுள்ள பாலாடைக்கட்டிகள் விழுந்தன.
இதில் அவர் பாலாடைக்கட்டிகளுக்கு அடியில் சிக்கினார். அவர் மேல் ஆயிரக்கணக்கில் பாலாடைகட்டிகள் விழுந்தன.
தகவல் அறிந்த அதிகாரிகள் உடனே அவரை காப்பாற்ற விரைந்து வந்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
அவரது உடலை அவருடன் பணிபுரியும் அவரின் குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
அவர் உடலை கண்டுபிடித்து வெளியில் எடுக்கவே ஆயிரக்கணக்கில் பாலாடைக்கட்டிகள் மற்றும் அலமாரிகளை கையால் நகர்த்த வேண்டியிருந்ததாகவும், சியாப்பரினியின் உடலை கண்டுபிடிக்க சுமார் 12 மணிநேரம் ஆனதாகவும் அவரை மீட்க வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு அல்லது பொருட்களின் தேய்மானம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், முதல் உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.
- குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
- இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்
ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.
இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.
இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.
இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.
அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.
இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.
இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
- சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
- இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.
ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.
அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.
பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.
"இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
"நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.
சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
- குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
- இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

"அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளர் விமானத்தில் இருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர்.
விமான பயிற்சியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன.
உலக மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் அளவிற்கு இந்த ஜி20 நாடுகளின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் 80 சதவீதம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மற்றும் உலகின் நில பரப்பில் 50 சதவீதம் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன.

அந்த வருடத்தில் இந்தியா தனது 75வது வருட சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. இந்த சிறப்பு நிறைந்த ஆண்டில் உலக தலைவர்களை வரவேற்கிறோம். மிக வேகமுடன் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டுக்கு வாருங்கள்.
இந்தியாவின் வளமிக்க வரலாறு மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் விருந்தோம்பலை பற்றி அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள் என டுவிட்டரில் அறிவித்துள்ளார். #PMModi #G20Summit
மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip
மேற்கு வங்காளம் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நல்ல பலனை அளித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஜெர்மனி, இத்தாலி நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டுக்கு வருமாறு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அந்த அழைப்பை ஏற்று மம்தா பானர்ஜி இன்று காலை 9.45 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றார். வழியில் துபாயில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் ஜெர்மனி சென்றடையும் அவர் அங்கிருந்து இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்கிறார்.
இருநாடுகளிலும் 12 நாள் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை திரட்டும் மம்தா, வரும் 28-ம் தேதி கொல்கத்தா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தாவுடன் மேற்கு வங்காளம் மாநில அரசின் தலைமை செயலாளர் மலய் டேய், நிதிமந்திரி அமித் மித்ரா மற்றும் நிதித்துறை செயலாளர் திவேதி ஆகியோரும் சென்றுள்ளனர். #MamataGermanytrip ##MamataItalytrip