search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pope"

    • வரும் அக்டோபர் மாதம் ஆயர்கள் மாமன்ற கூட்டம் வாடிகனில் நடக்கிறது.
    • முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க போப் அனுமதி வழங்கியுள்ளார்.

    வாடிகன் சிட்டி:

    உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் வரும் அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள்மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அறிக்கையை அவர் வெளியிடுவார்.

    இந்நிலையில், ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் சரிபாதி பேர் பெண்களாகவும் இருப்பார்கள். இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக இந்த மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கி உள்ளார்.

    அதன்படி இந்த மாமன்றத்தில் ஆயர் அல்லாத பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன் 5 கன்னியாஸ்திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்கள். போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ள இந்த திருத்தத்தை வாடிகன் நேற்று வெளியிட்டது. 

    • கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர்.
    • போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    வாடிகன்:

    கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் அடுத்த பயணத்திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்ல உள்ளேன். அதன்பின்னர் மங்கோலியாவுக்கு முதன்முதலாகச் செல்கிறேன். 2024-ம் ஆண்டு இந்தியா வர உள்ளேன் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்தியா வர உள்ளார்.

    ஏற்கனவே 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போப்பாண்டவரின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது.

    • ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
    • போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

    வாடிகன் அரண்மனை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு வந்த போப் பிரான்சிஸ் இன்று நடத்திய மத நல்லிணக்க பிரார்த்தனை கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். #PopeFrancisinUAE #PopeFrancis
    அபுதாபி:

    உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமாக இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் அரண்மனை இயங்கி வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தற்போதைய தலைமை மதகுருவாக போப் பிரான்சிஸ் பதவி வருகிறார்.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த (2019) ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்தார்.
     
    இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் முன்னர் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் “மதங்களுக்கு இடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான்” என தெரிவித்திருந்தார்.

    அவ்வகையில், அராபிய நாடுகளுக்கு செல்லும் முதல் வாடிகன் தலைவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கினார்.

    வாடிகனில் இருந்து தனிவிமானத்தில் புறப்பட்ட அவர் அபுதாபி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், போப் பிரான்சிசை நேரில் வரவேற்றார்.

    நேற்று காலை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படையினர் அணிவகுப்புடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.



    நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போப், மத்திய வளகுடா பகுதியில் போர் பதற்றம் தணிந்து அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

    வளைகுடா நாடுகளில் வாழும் அனைத்து மத நம்பிக்கையுடைய மக்களும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கு நடந்தாலும் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த அரசுகள் முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், அபுதாபி நகரில் உள்ள ஸயெத் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற மத நல்லிணக்க பொதுக்கூட்டம்  மற்றும்  சிறப்பு பிரார்த்தனையில் (திருப்பலி)  போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சை கேட்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் அரங்கத்தில் திரண்டிருந்தனர். சுமார் 10 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் அழைப்பிதழ் தரப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இதுதவிர, வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தொலைக்காட்சிகள் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போப் உரையாற்றியதை நேரலையாக கண்டு பரவசமடைந்தனர். 



    காரில் வந்த போப் பிரான்சிஸ் இந்த அரங்கத்துக்குள் நுழைந்தபோது பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் ஜெப கீதங்களை இசைத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் வெளிப்படையாக பொது இடங்களில் பிறமத வழிபாடுகளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போப் பிரான்சிஸ் இன்று பங்கேற்ற கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ளதைப்போல் தற்காலிக ஜெப மாடம் அமைக்கப்பட்டு, பெரிய அளவிலான சிலுவை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    வெளிநாடுகளில் இருந்து வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்களை குறிப்பிட்டு பேசிய போப் பிரான்சிஸ், ‘நீங்கள் எல்லாம் பிறந்த இடங்களைவிட்டு தொலைதூரம் வந்து, உங்களது அன்பிற்குரியவர்களையும்,உறவினர்களையும் பிரிந்து, இங்கு வாழ்ந்து வருவது சுலபமான காரியமல்ல.

    அதிலும் எதிர்காலத்தை பற்றிய உத்தரவாதமில்லாமல் இங்கு வாழும் உங்களை கருணை மிக்க கடவுள் மறந்து விடுவதில்லை. தனது மக்களை அவர் கைவிடுவதுமில்லை’ என போப் பிரான்சிஸ் கூறியபோது உற்சாகமிகுதியில் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    இன்றுடன் இங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்யும் போப் பிரான்சிஸ் விரைவில் வாடிகன் அரண்மனையை சென்றடைவார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PopeFrancisinUAE  #PopeFrancis
    வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. #Pope #PrayApp
    வாடிகன்சிட்டி:

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன்சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிரார்த்தனை நடத்தினார். அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது பிரார்த்தனைக்காக ‘டேப்லெட்’டில் ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் உலக அமைதி மற்றும் இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றவும் பிரார்த்தனை செய்தார்.

    இந்த செயலி மூலம் வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட முடியும். இந்த செயலியை தொடங்கி வைக்கும் முன்பு போப் ஆண்டவர் பேசினார்.



    அப்போது “எனது மனதில் 2 வலிகள் ஏற்பட்டுள்ளன. அது கொலம்பியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரச்சினைகளாகும். லிபியா மற்றும் மொரர்கோ நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாக தஞ்சம் பிழைக்க படகில் சென்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கினர். அவர்களில் 170 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். கொலம்பியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களுக்காகவும், உலகில் அமைதி நிலவவும் பிரார்த்தனை செய்வோம்” என்றார்.

    இதற்கிடையே வாடிகன் நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொண்டால் போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pope #PrayApp
    வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    பியாங்யாங்:

    2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.

    இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    கன்னியாஸ்திரி பிஷப் மீது கற்பழிப்பு புகார் கூறியதால் சட்டப்பூர்வ விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று போப் ஆண்டவருக்கு பிஷப் கடிதம் அனுப்பியுள்ளார். #Keralanun #Jalandharbishop

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால் அவர் அதுபற்றி போலீசில் புகார் செய்தார். மேலும் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கும் பி‌ஷப் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து ஜலந்தர் பி‌ஷப்பை விசாரணைக்கு வருகிற 19-ந்தேதி ஆஜராகும் படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதுபற்றி பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் கூறும்போது தன்மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணைக்கு அஜராகி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். மேலும் அவர் தனது பி‌ஷப் பொறுப்புகளையும் மூத்த பாதிரியாரிடம் ஒப்படைத்துள்ளார்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல், வாடிகனில் உள்ள போப் ஆண்டவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து பி‌ஷப் பொறுப்பில் இருந்து விலகி பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளேன். சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். அதன்படி 19-ந்தேதி நடைபெறும் போலீஸ் விசாரணையில் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும் பெருகி வருகிறது. கிறிஸ்தவ அமைப்புகள், இந்து, முஸ்லிம் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாதிரியார்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று கொச்சி பகுதியை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். தேவைப்பட்டால் சாலைக்கு வந்து போராடவும் தாங்கள் தயார் என்று மாணவர்கள் அறிவித்தனர்.

    மேலும் சமூக சேவகி கவுரி அம்மா நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறும்போது கேரள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கன்னியாஸ்திரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களை பற்றி என்ன கூறுவது? பி‌ஷப்பை கைது செய்வதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இதற்காக பொதுமக்களை திரட்டி போராடுவோம் என்றார். இன்றும் உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாலியல் புகார் கூறி உள்ள கன்னியாஸ்திரியின் சகோதரி தலைமை தாங்கினார். பலரும் திரண்டு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். #Keralanun #Jalandharbishop

    இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #ENGvIND #ChrisWoakes
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்து தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.

    5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இடம் பெறாத கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. மொயீன் அலி, 3. ஜிம்மி ஆண்டர்சன், 4. பேர்ஸ்டோவ், 5. ஸ்டூவர்ட் பிராட், 6. பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. சாம் குர்ரான், 9. ஜென்னிங்ஸ், 10. போப், 11. அடில் ரஷித், 12. பென் ஸ்டோக்ஸ், 13 .கிறிஸ் வோக்ஸ்.
    ஓரினச்சேர்க்கையாளரை பாதுகாக்க முயன்றதற்காக போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைக்கு அவர் பதில் அளித்துள்ளார். #Pope #Popekeepssilent #TheodoreMcCarrick
    வாட்டிகன் சிட்டி:

    அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள இரு திருச்சபைகளில் பணியாற்றியவர் தியோடர் மெக்காரிக் (88). கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருந்தபோது அங்கு திருமறை பயில வந்த ஆண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, மெக்காரிக் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.

    தியோடர் மெக்காரிக்

    இதுதொடர்பாக வாட்டிகன் அரண்மனை விசாரணை நடத்திவந்த நிலையில்  கார்டினல்கள் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். அவர் வேறு எங்கும் மதப்பிரசாரங்களில் ஈடுபட வாட்டிகன் அரண்மனை தடை விதித்துள்ளது.

    இதற்கிடையில், அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அங்கு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன் இந்த பாவச்செயல் புரிந்தோரை மன்னிக்கும்படி கடவுளிடம் நேற்று பிரார்த்தனை செய்தார்.

    இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரியான கார்லோ மரியோ விகானோ என்பவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, 11 பக்கங்களை கொண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, ‘அமெரிக்காவில் பாதிரியார் மெக்காரிக் நடத்திய பாலியல் லீலைகளை கடந்த 2013-ம் ஆண்டு அவர் போப் ஆக பதவியேற்ற காலத்தில் நான் பிரான்சிஸிடம் தெரிவித்தேன்.

    ஆனால், நான் மெக்காரிக்கை பற்றி நேரடியாக புகார் அளித்தும் அவர் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக அவரது போப் பதவியை பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தேவாலயங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என போப் பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    சர்வதேச தேவாலயம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடியான நிலையில் தனது தவறுகளை அவர் உணர வேண்டும்.

    பாலியல் பலாத்காரங்களில் தொடர்புடையவர்கள், புகார்களை மறைக்க காரணமாக இருந்த மற்றவர்களுடன் சேர்ந்து போப் பிரான்சிஸும் பதவி விலக வேண்டும்’ என குறிப்பிட்டார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் வாழும் சுமார் 125 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கார்லோ மரியா விகானோ

    போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, கடந்த 2001-2006 ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் அரண்மனை தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு ரோம் நகருக்கு திரும்பும் வழியில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கார்லோ மரியா விகானோ எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மற்றும் ராஜினாமா கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஒரேயொரு வார்த்தைகூட பேசத் தயாராக இல்லை’ என்று குறிப்பிட்டார்.

    என்மீதான குற்றச்சாட்டுகளை கவனமாக படித்துப் பார்த்து பத்திரிகையாளர்களான நீங்களே இதுதொடர்பாக தீர்மானிக்கலாம் என உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்த பின்னர் சிறிது காலத்துக்கு பின்னர் நான் பேச ஆசைப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  #Pope #Popekeepssilent #TheodoreMcCarrick
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் மழைக் காரணமாக காலதாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 31 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்படும். ஆனால் லார்ட்ஸில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இளம் வீரரான போப் அறிமுகமாகிறார். இந்திய அணியில் இடம் பெறும் 11 வீரர்கள் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
    சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். #Twitter #Trump #Modi
    ஜெனீவா:

    உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.  

    இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரம் வருமாறு:

    சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டொனால்ட் டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.

    முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    வெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Twitter #Trump #Modi
    ×