என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pope"

    • மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
    • ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது

    கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக போப் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.

    கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.

    தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.

    இந்த பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது 

    • ஈரானிலிருந்து, தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.
    • மூன்றாம் உலக போர் உருவாகி விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மூன்றாம் உலக போர் உருவாகி விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், போர்க் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று போப் லியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "போர் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, அது அவற்றைப் பெருக்கி, மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. அவை குணமடைய தலைமுறைகள் ஆகும். எந்த ஆயுத வெற்றியும் தாய்மார்களின் வலியையோ, குழந்தைகளின் பயத்தையோ அல்லது பறிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலத்தையோ ஈடுசெய்ய முடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். நாடுகள் தங்கள் எதிர்காலத்தை வன்முறை மற்றும் இரத்தக்கறை படிந்த மோதல்களால் அல்ல, அமைதிப் பணிகளால் வடிவமைக்கட்டும்!

    இன்று, மனிதகுலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்பும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சலால் அல்லது மோதலைத் தூண்டும் வார்த்தைகளால் மூழ்கடிக்கப்படக்கூடாது.

    சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் போரின் துயரத்தை சரிசெய்ய முடியாத ஒரு பிரச்சனையாக மாறுவதற்கு முன்பு அதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மனிதர்களின் கவுரமான நடத்தை ஆபத்தில் இருக்கும்போது 'தொலைதூர' மோதல்கள் எதுவும் இல்லை.

    மத்திய கிழக்கிலிருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து, தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட இந்த துயரமான பின்னணியில், குறிப்பாக காசா மற்றும் பிற பிரதேசங்களில், போதுமான மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்து வரும் அவசரநிலையில், மக்களின் அன்றாட துன்பங்கள் மறக்கப்படும் அபாயம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான உலகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
    • யாரும் மற்றொருவரின் இருப்பை ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது.

    மத்திய கிழக்கில் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான்-இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு விடுத்துள்ளார்.

    இரு நாடுகளும் பகுத்தறிவுடன் செயல்படவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தவும் போப் அழைப்பு விடுத்தார். அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான உலகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    போப் கூறியதாவது, "ஈரான் மற்றும் இஸ்ரேலின் நிலைமை மோசமடைந்துள்ளது. பொறுப்பு மற்றும் பகுத்தறிவுக்காக நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப, அணுசக்தி அச்சுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டை பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் தொடர வேண்டும்.

    யாரும் மற்றொருவரின் இருப்பை ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது. அமைதிக்கான காரணத்தை ஆதரிப்பது, நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குவது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவிப்பது அனைத்து நாடுகளின் கடமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

    புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், புதிய போப் பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்வு, வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்னர் யாதுங்கோ பட்டொன் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 14ம் போப் ஆக பதவியேற்றுள்ளார்.

    • வாடிகன் சிட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போப் லியோ பதவியேற்றார்.
    • போப் லியோவை சந்திக்க நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் வாடிகன் சென்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் சின்னர் உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், வாடிகன் சிட்டியில் புதிதாகப் பதவியேற்ற அமெரிக்காவை சேர்ந்த போப் லியோவை, நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் இன்று நேரில் சந்தித்தார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னர், இது மிகப் பெரிய கவுரவும் என பதிவிட்டுள்ளார்.

    புதிய போப் லியோ டென்னிஸ் ரசிகர் என்பதும், 3 மாத தடைக்குப் பிறகு இத்தாலி ஓபன் தொடரில் சின்னர் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.
    • புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர்.

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப் ஆக லியோ XIV மே 8 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.

    புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அவர் வரவேற்றார்.

    இன்னொரு போர் ஒருபோதும் வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். போப் லியோ தனது உரையில் உலகெங்கிலும் உள்ள மோதல்கள் குறித்தும் பேசினார்.

    அவர் தனது உரையில், காசாவில் துன்பப்படும் மக்களையும், உக்ரைனில் நடந்த போரினால் இயல்பு வாழ்க்கையை இழந்த மில்லியன் கணக்கான மக்களையும் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் அமைதியின் அதிசயம் நிகழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்

    • போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
    • புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.

    அதன்படி, புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிய போப்-ஆக தேர்வான 14ம் லியோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் 14ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
    • முதல் நாள் நடந்த வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    வாடிகன் சிட்டி:

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

    இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
    • முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.

    இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

    முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.

    இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

    அதன்படி, இன்றும் 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இரண்ட நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

    We have a pope என வாடிகனில் உள்ள தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்ந்தெடுத்தனர்.

    • 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
    • ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

    போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

    இன்று 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
    • போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர்.
    • போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    வாடிகன்:

    கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் அடுத்த பயணத்திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்ல உள்ளேன். அதன்பின்னர் மங்கோலியாவுக்கு முதன்முதலாகச் செல்கிறேன். 2024-ம் ஆண்டு இந்தியா வர உள்ளேன் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்தியா வர உள்ளார்.

    ஏற்கனவே 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போப்பாண்டவரின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது.

    ×