என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Washington Open"

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் இறுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 70 நிமிடங்கள் நடைபெற்றது.

    நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, எலினா ரிபாகினா ஆகியோரை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லைலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லைலா 6-7 (2-7), 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதனால் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, போலந்தின் மக்டலேனா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,

    போலந்தின் மக்டலேனா பிரெச் உடன் மோதினார்.

    இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக்-ஸ்வீடனின் கோரன்சன் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 7-6 (7-1) என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 10-6 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் பெய்டன் மெக்கென்சி மோதினார்.

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் ஜூலை 21 முதல் 27 வரை அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான வில்லியம்ஸ் (அமெரிக்கா) மற்றும் சக நாட்டவரான பெய்டன் மெக்கென்சி ஸ்டெர்ன்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.

    இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 45 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு WTA ஒற்றையர் போட்டியில் வென்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

    வாஷிங்டன் டென்னிஸ் ஓபனில் ஆன்டி முர்ரே விடியற்காலை மூன்று மணி வரை விளையாடி ருமேனியா வீரரை வீழ்த்தியுள்ளார். #AndyMurray
    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ருமேனியாவின் மேரியஸ் கோபிலை எதிர்கொண்டார்.

    வலது பக்கம் இடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதம் ஓய்வு எடுத்த பிறகு தற்போது முர்ரே களம் இறங்கினார்.

    மழைக்காரணமாக ஆட்டம் மிகவும் காலதாமதமாக தொடங்கியது. முர்ரேவிற்கு மேரியஸ் கோபில் கடும் சவாலாக விளங்கினார். இதனால் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் முர்ரே 6 (5) - 7(7) என தோல்வியடைந்தார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்ட முர்ரே 2-வது சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் மல்லுக்கட்டியதால் ஆட்டம் நீண்டுக் கொண்டே சென்றது. இறுதியில் முர்ரே 7(7) - 6(4) எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். வெற்றி பெற்ற சந்தோசத்தில் முர்ரே கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த போட்டி முடிவடைவதற்கு அதிகாலை 3 மணியாவிட்டது. இது முர்ரேவிற்கு கடும் சோர்வை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து முர்ரே கூறுகையில் ‘‘போட்டி அதிகாலை வரை நடைபெற்று, அடுத்த சுற்றுக்கு உடனடியாக தயாராவதற்கு எனது உடல்நிலை தற்போது ஒத்துழைக்கும் என்று நான் நினைக்கவில்லை.



    நான் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியில் ஆடியுள்ளேன். இதுபோன்று அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் முடிவது எந்தவொரு வீரருக்கும் சிறப்பானது அல்ல. போட்டி, வீரரகள், டிவி, ரசிகர்கள் என யாராக இருந்தாலும் அது பொருந்தும்.

    நான் உடனடியாக அடுத்த போட்டிக்கு தயாராகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்றார்.
    ×