என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daniil Medvedev"

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் மொனாக்கோவின் வேலண்டினிடம் தோல்வி அடைந்தார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோவின் வேலண்டின் உடன் மோதுகிறார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-6 (8-6), 6-7 (1-7), 6-4 என்ற செட் கணக்கில் லேனரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்உடன் மோதுகிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் டேவிடோவிச் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-5, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் கொரண்டின் மவுடெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஸ்வரேவை சந்திக்க உள்ளார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லாரன்சோ சொனெகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.

    2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.

    3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.

    தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.

    • ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ், பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான மெத்வதேவ் (ரஷியா) இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி 6-3, 7-5, 6-7, (5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதெவை போராடி வீழ்த்தினார்.

    தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் மெத்வதேவ், ஆன்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்தது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி, பிரிட்டனின் ஜாக் டிராபர்-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதனால் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெட்வதேவ்வும் கைப்பற்றினர்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெத்வதேவும் கைப்பற்றினர். 3-வது செட் பரபரப்பாக சென்றது. இதில் போன்சி 7-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 4-வது செட்டையும் போன்சி வென்றார். இதன் மூலம் 7-6 (2), 3-6, 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி போன்சி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
    • இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீரர் மேட்தேவ் மற்றும் அமெரிக்க வீரர் டாமி பால் மோதினர்.

    இந்த போட்டியில் மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டென்மார்க் வீரரான ஹோல்கர் மோதினர். இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.

    முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    ×