என் மலர்
நீங்கள் தேடியது "Wimbledon Tennis"
- முதல் செட்டை இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.
- தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, ஆட்டத்தின் 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அனல் பறந்தது.
இதில் அபாரமாக செயல்பட்ட மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடி 7-6 (10-4) என்ற புள்ளிக்கணக்கில் யுகி பாம்ப்ரி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- முதல் செட்டை டிமிட்ரோ 6-3 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தனர்.
இதனையடுத்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதால் விலகியதால் சின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காயத்தால் இந்த போட்டியில் தொடர முடியாத நிலையில் கண்கலங்கியபடி அவர் மைதானத்திற்கு வந்தார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்தப்படி ஆறுதல் கூறினார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிமிட்ரோ தெம்பி தெம்பி அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்ற படி மரியாதை செலுத்தினர்.
முதல் நிலை வீரரான சின்னரை எளிதாக வீழ்த்த வேண்டிய நிலையில் காயம் அவரது வெற்றியை பரித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மற்றொரு போட்டியில் மிரா ஆண்ட்ரீவா (ரஷியா), எம்மா நவரோவை (அமெரிக்கா) தோற்கடித்ததார்.
- சம்சனோவாவும் (ரஷியா) கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கை சேர்ந்த கிளாரா டவ்செனை எளிதில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் 7-ம் நிலை வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா (ரஷியா) 6-2,6-3 என்ற கணக்கில் 10-வது வரிசையில் உள்ள எம்மா நவரோவை (அமெரிக்கா) தோற்கடித்ததார். இதேபோல 19-வது வரிசையில் உள்ள சம்சனோவாவும் (ரஷியா) கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- முதல் செட்டை 3-6 என்ற கணக்கிலும் 2-வது செட்டையும் 5-7 என்ற கணக்கிலும் தோற்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட் ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் தோல்வியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். டிமிட்ரோவ் விலகியதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சின்னர் கால்இறுதியில் 10-ம் நிலை வீரரான ஷெல்டனை சந்திக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அவர் 4-வது சுற்றில் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற கணக்கில் லாரன்சோ சோன்கோவை (இத்தாலி) தோற்கடித்தார்.
- உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
- உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
இப்போட்டியில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வென்று சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
- மேடிசன் கீஸ் (அமெரிக்கா) லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) ஆகியோர் மோதினர்.
- மற்றொரு ஆட்டத்தில் நயோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் அனஸ்தேசியா செர்ஜியேவ்னா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.
Wimbledon Tennis, Madison Keys, naomi osaka, விம்பிள்டன் டென்னிஸ், மேடிசன் கீஸ், நவோமி ஒசாகாகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
மேடிசன் கீஸ் (அமெரிக்கா) லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) ஆகியோர் மோதினர். இதில் லாரா நடாலி 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று மேடிசன் கீஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நயோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் அனஸ்தேசியா செர்ஜியேவ்னா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஒசாகா வெற்றி பெற்றார். அடுத்த 2 செட்டை அனஸ்தேசியா கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா வெற்றி பெற்றார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பாலாஜி, வரேலா ஜோடி அமெரிக்க ஜோடியுடன் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 74-வது இடத்தில் உள்ள பாலாஜி அவரது மெக்சிகன் ஜோடியான மிகுவல் ரெய்ஸ்-வரேலா மற்றும் அமெரிக்க ஜோடியான லெர்னர் டியென்- அலெக்சாண்டர் கோவாசெவிக் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்க ஜோடியான லேர்னர் டியென் மற்றும் அலெக்சாண்டர் கோவாசெவிச்சை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் பாலாஜி மற்றும் ரெய்ஸ்-வரேலா நான்காவது நிலை வீரர்களான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபாலோஸுக்கு எதிராக 2-வது சுற்றில் மோதவுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இதில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவாக் ஜோக்கொவிச் (செர்பியா) மற்றும் டேனியல் எவன்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-0 என்ற கணக்கில் கோக்கோவிச் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இதில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஓல்கா டானிலோவிச் (செர்பியா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா (பெலருசியா) மற்றும் மேரி பௌஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர். இதில் சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டத்தில் கிறிஸ்டினா புக்சா (ஸ்பானிஷ்), லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) சோனய் கர்தல் (இங்கிலாந்து) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
- பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா மற்றும் எலிசபெட்டா ஆகியோர் மோதினர்.
- இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் எலிசபெட்டா கோசியாரெட்டோ (இத்தாலி) ஆகியோர் மோதினர்.
இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.
- முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெட்வதேவ்வும் கைப்பற்றினர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெத்வதேவும் கைப்பற்றினர். 3-வது செட் பரபரப்பாக சென்றது. இதில் போன்சி 7-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 4-வது செட்டையும் போன்சி வென்றார். இதன் மூலம் 7-6 (2), 3-6, 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி போன்சி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும்.
- வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும். அத்துடன் வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதையொட்டி கடந்த சில தினங்களாக வீரர், வீராங்கனைகள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் கார்சன் பிரான்ஸ்டைன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.






