என் மலர்
நீங்கள் தேடியது "Grigor Dimitrov"
- முதல் செட்டை டிமிட்ரோ 6-3 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தனர்.
இதனையடுத்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதால் விலகியதால் சின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காயத்தால் இந்த போட்டியில் தொடர முடியாத நிலையில் கண்கலங்கியபடி அவர் மைதானத்திற்கு வந்தார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்தப்படி ஆறுதல் கூறினார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிமிட்ரோ தெம்பி தெம்பி அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்ற படி மரியாதை செலுத்தினர்.
முதல் நிலை வீரரான சின்னரை எளிதாக வீழ்த்த வேண்டிய நிலையில் காயம் அவரது வெற்றியை பரித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல் செட்டை 3-6 என்ற கணக்கிலும் 2-வது செட்டையும் 5-7 என்ற கணக்கிலும் தோற்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட் ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் தோல்வியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். டிமிட்ரோவ் விலகியதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சின்னர் கால்இறுதியில் 10-ம் நிலை வீரரான ஷெல்டனை சந்திக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அவர் 4-வது சுற்றில் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற கணக்கில் லாரன்சோ சோன்கோவை (இத்தாலி) தோற்கடித்தார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் சிட்சிபாஸ், ஜெர்மன் வீரர் ஜேன் லென்னார்டு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை3-6 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிலி வீரர் நிகோலஸ் ஜேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் பல்கேரியாவின் டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.
இதில் டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதியில் டிமிட்ரோவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் டிமிட்ரோவ் 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை ஸ்வரேவ் போராடி 7-6 (7-4) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் முன்னணி வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான டிமித்ரோவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.
இதில் டிமித்ரோவ் முதல் செட்டை 6-1 என வென்றார். 2வது செட்டில் 2-1 என முன்னிலை வகித்தபோது தாம்சன் திடீரென விலகினார்.
இதையடுத்து, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டிமித்ரோவ், செக் வீரரான ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.






