என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janic Sinner"

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், கனடாவின் டேனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.

    முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர், அதிரடியாக ஆடி அடுத்த மூன்று செட்களை 6-4, 6-3, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை டிமிட்ரோ 6-3 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.
    • 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தனர்.

    இதனையடுத்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதால் விலகியதால் சின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காயத்தால் இந்த போட்டியில் தொடர முடியாத நிலையில் கண்கலங்கியபடி அவர் மைதானத்திற்கு வந்தார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்தப்படி ஆறுதல் கூறினார்.

    தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிமிட்ரோ தெம்பி தெம்பி அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்ற படி மரியாதை செலுத்தினர்.

    முதல் நிலை வீரரான சின்னரை எளிதாக வீழ்த்த வேண்டிய நிலையில் காயம் அவரது வெற்றியை பரித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் செட்டை 3-6 என்ற கணக்கிலும் 2-வது செட்டையும் 5-7 என்ற கணக்கிலும் தோற்றார்.
    • 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட் ரோவை எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் தோல்வியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். டிமிட்ரோவ் விலகியதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    சின்னர் கால்இறுதியில் 10-ம் நிலை வீரரான ஷெல்டனை சந்திக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அவர் 4-வது சுற்றில் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற கணக்கில் லாரன்சோ சோன்கோவை (இத்தாலி) தோற்கடித்தார்.

    • ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் மெத்வதேவை வீழ்த்தி சின்னர் அசத்தல்.
    • முதல் 2 செட்களை இழந்தாலும் கடைசி 3 செட்களை வென்று சின்னர் அதகளப்படுத்தினார்.

    மெல்போர்னில் நடைபெற்று வந்த ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4-ம் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார்.

    இந்த நிலையில் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

    முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர்.

    ×