என் மலர்
நீங்கள் தேடியது "சபலென்கா"
- டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
- சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.
டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை யான சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.
இதில் ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.
- சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா (பெலாரஸ்) - அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா மோதினார்கள்.
இதில் சபலென்கா 6-3, 7-6 ( 7-3) என்ற நேர் செட் கணக்கில் அனிஸ் மோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்ல அவருக்கு 1 மணி 34 நிமிட நேரமே தேவைப்பட்டது.
சபலென்கா கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து அமெரிக்க ஓபன் கிராண்ட் சிலாமை கைப்பற்றினார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டதை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.
சபலென்கா கடந்த ஜனவரி மாதம் மேடிசன் கெய்சிடம் (அமெரிக்கா) ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும், ஜூன் மாதம் கோகோ கவூப்பிடம் (அமெரிக்கா) பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியிலும் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த ஆண்டில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அமெரிக்க வீராங்கனையை பழி தீர்த்துக் கொண்டு பட்டத்தை வென்று சாதித்தார்.
27 வயதான சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டதை 2 தடவையும் (2024, 2025 ), ஆஸ்திரேலிய ஓபன் பட்டதை 2 முறையும் ( 2023, 2024 ) வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற சபலென்காவுக்கு ரூ.44 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அனிஸ்மோவா ரூ. 22 கோடி பெற்றார். சபலென்கா தனது 100-வது கிராண்ட்சி லாம் வெற்றியை பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) -இரண்டாம் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.
இந்த ஆண்டில் இருவரும் 3-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சின்னர்-அல்காரஸ் மோதும் இறுதி ஆட்டத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேரில் பார்க்கிறார்.
- ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
- சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லெனார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள டெய்லர் பிரீட்ஸ் (அமெரிக்கா), ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர் கொண்டார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 13 நிமிட நேரமே தேவைப்பட்டது.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கிரஜ்கோவா ( செக் குடியரசு) வெற்றி பெற்றார்.
செக் குடியரசுவை சேர்ந்த வோண்ட் ரூகோவா 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் இனா ஷிபஹராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
- முதல் செட் மற்றும் 3ஆவது செட்டை 6-4 என இழந்து தோல்வியடைந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா, 13ஆம் நிலை வீராங்கனையான அனிசிமோவோவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என அனிசிமோவா கைப்பற்றினார். 2ஆவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார். அவர் 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் இருவரும் மல்லு கட்டினர். ஆனால் அனிசிமோவை ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் 8ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், தரநிலை பெறாத பென்சிக்கை எதிர்கொள்கிறார்.
சபலென்கா 4 முறையும், அனிசிமோவா 5 முறையும் டபுள் ஃபால்ட்ஸ் செய்தனர். சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 68 சதவீதமும், அனிசிமோவா 63 சதவீதமும் பாயின்ட்ஸ் பெற்றனர்.
2ஆவது சர்வீஸ் மூலம் அனிசிமோவா 69 பாயின்ட்ஸ், சபலென்கா 50 சதவீதம் பாயின்ட்ஸ் பெற்றனர். சபலென்காவின் பிரேக் பாயின்ட்ஸ் 3/14, அனிசிமோவாவின் பிரேக்ஸ் பாயின்ட்ஸ் 4/11 ஆகும். சபலென்கா 106 பாயின்ட்ஸ், அனிசிமோவா 108 பாயின்ட்ஸ் பெற்றனர்.
சபலென்கா 14 கேம்ஸ்களையும், அனிசிமோவா 16 கேம்ஸ்களையும் வென்றனர்.
- உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
- உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.
இப்போட்டியில் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வென்று சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
இன்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். 2வது செட்டை ரிபாகினா 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 7-6 (8-6) என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதல் செட்டை 6(5)-7(7) என கடும் போராட்டத்திற்குப் பின் கோகோ காஃப் இழந்தார்.
- பின்னர் சூப்பர் கம்பேக் கொடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது செட்டை கைப்பற்றினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபும் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2ஆவது செட்டில் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார். கோகோ காஃப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காஃப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காஃப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காஃப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார்.
10ஆவது கேமிற்கான சர்வீஸை காஃப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காஃப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (7-1) என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பதிலுக்கு 2வது செட்டை ஸ்வியாடெக் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-0 என வென்ற சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.
- சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பயோலினி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற சாதனையை ஜாஸ்மின் பயோலினி படைத்துள்ளார்.
- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
- நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.
1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.
ஸ்பெயின்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.






