என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் அரையிறுதி: NO-1 சபலென்காவிற்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீராங்கனை..!
- 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
- முதல் செட் மற்றும் 3ஆவது செட்டை 6-4 என இழந்து தோல்வியடைந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா, 13ஆம் நிலை வீராங்கனையான அனிசிமோவோவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என அனிசிமோவா கைப்பற்றினார். 2ஆவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார். அவர் 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் இருவரும் மல்லு கட்டினர். ஆனால் அனிசிமோவை ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் 8ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், தரநிலை பெறாத பென்சிக்கை எதிர்கொள்கிறார்.
சபலென்கா 4 முறையும், அனிசிமோவா 5 முறையும் டபுள் ஃபால்ட்ஸ் செய்தனர். சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 68 சதவீதமும், அனிசிமோவா 63 சதவீதமும் பாயின்ட்ஸ் பெற்றனர்.
2ஆவது சர்வீஸ் மூலம் அனிசிமோவா 69 பாயின்ட்ஸ், சபலென்கா 50 சதவீதம் பாயின்ட்ஸ் பெற்றனர். சபலென்காவின் பிரேக் பாயின்ட்ஸ் 3/14, அனிசிமோவாவின் பிரேக்ஸ் பாயின்ட்ஸ் 4/11 ஆகும். சபலென்கா 106 பாயின்ட்ஸ், அனிசிமோவா 108 பாயின்ட்ஸ் பெற்றனர்.
சபலென்கா 14 கேம்ஸ்களையும், அனிசிமோவா 16 கேம்ஸ்களையும் வென்றனர்.






