என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விம்பிள்டன்"

    • ஜானிக் சின்னர் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இதனையடுத்து விம்பிள்டனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், "விம்பிள்டன் நாயகன்' என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் கோப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜனநாயகன் படத்தில் விஜய் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை ரெபரென்ஸாக பயன்படுத்தி இந்த போஸ்டரை விம்பிள்டன் வடிவமைத்துள்ளது. இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 


    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
    • முதல் செட் மற்றும் 3ஆவது செட்டை 6-4 என இழந்து தோல்வியடைந்தார்.

    விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா, 13ஆம் நிலை வீராங்கனையான அனிசிமோவோவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 6-4 என அனிசிமோவா கைப்பற்றினார். 2ஆவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார். அவர் 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் இருவரும் மல்லு கட்டினர். ஆனால் அனிசிமோவை ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் 8ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், தரநிலை பெறாத பென்சிக்கை எதிர்கொள்கிறார்.

    சபலென்கா 4 முறையும், அனிசிமோவா 5 முறையும் டபுள் ஃபால்ட்ஸ் செய்தனர். சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 68 சதவீதமும், அனிசிமோவா 63 சதவீதமும் பாயின்ட்ஸ் பெற்றனர்.

    2ஆவது சர்வீஸ் மூலம் அனிசிமோவா 69 பாயின்ட்ஸ், சபலென்கா 50 சதவீதம் பாயின்ட்ஸ் பெற்றனர். சபலென்காவின் பிரேக் பாயின்ட்ஸ் 3/14, அனிசிமோவாவின் பிரேக்ஸ் பாயின்ட்ஸ் 4/11 ஆகும். சபலென்கா 106 பாயின்ட்ஸ், அனிசிமோவா 108 பாயின்ட்ஸ் பெற்றனர்.

    சபலென்கா 14 கேம்ஸ்களையும், அனிசிமோவா 16 கேம்ஸ்களையும் வென்றனர்.

    • அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • மற்றொரு காலிறுதி சுற்றில் கரன் கச்சனாவை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஜோகோவிச் அபாரமாக விளைாயடி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் - அலெக்ஸ் டி மினார் மோதிய போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.

    விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார்

    • முதல் செட்டை 1-6 என இழந்தார்.
    • அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றினார்.

    விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலியுதியில் சிலிச்சை கோபோல்லி 6-4, 6-4, 6(4)-7(7), 7(7)-6(3) என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்போனோவா, அனிசிமோவா, பென்சிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

    இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

    ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

    இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

    ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

    • விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறும் இடத்தில் தியானத்திற்கான அறை உள்ளது
    • தியான அறைக்கு ரசிகர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள்

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு.

    விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன.

    கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

    பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    ''ஒரு ஜோடி அறையில் இருந்து மிகப்பெரிய புன்னகையுடன் வந்ததாகவும், பெண் கோடைக்கால ஆடை அணிந்திருந்ததாகவும், உள்ளே வேறு என்ன நடந்திருக்கும்'' என ரசிகர் ஒருவர் புகார் கூறியதாகவும், மற்றொரு ரசிகர் ''நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் சத்தம்'' கேட்டதாகவும் புகார் அளித்ததாக சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.

    அந்த அறையில் சேர், மடிக்கக் கூடிய மேஜை, சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளன.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.
    • சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.

    இதில், 7-5, 6-3, 6-7 (6/8), 6-7 (5/7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ஆண்ட்ரே ரூப்லெவ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், இத்தாலியின் எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை நேர் செட்களில் வென்றுள்ளார்.

    சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    • விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் 23 கிராண்ட் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2- வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) - உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 8 தடவை சாம்பியனாகி இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினால் பெடரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அவர் விம்பிள்டன் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    36 வயதான நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விம்பிள்டனில் 2018 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் 2020 ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

    அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாகவும், ஒட்டு மொத்தமாக 24-வது கிராண்ட் சிலாமையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபனை 3 தடவையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றுள்ளார்.

    20 வயதான அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். அமெரிக்க ஓபன் சாம்பியனான அவர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    சமபலம் வாய்ந்த இருவரும் மோதும் விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் தலா 1 வெற்றியை பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வான்ட்ரோ சோவா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை (துனிசியா) வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    ×