என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் கண்டுகளித்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா
- இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- ஜோகோவிச் அபாரமாக விளைாயடி காலிறுதிக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் - அலெக்ஸ் டி மினார் மோதிய போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.
விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார்
Next Story






