search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anushka Sharma"

    • வைரலான படங்களில், விராட் மற்றும் அனுஷ்கா கேமராவுக்காக தங்கள் புன்னகையை பளிச்சிடுவதைக் காணலாம்.
    • அனுஷ்கா பூக்கள் டிசைன் போட்ட மேக்சி உடையில் காணப்படுகிறார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது லண்டனில் உள்ளனர். வேறு நாடுகளைவிட லண்டன் இவர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விராட் கோலியும் அனுஷ்காவும் லண்டனை சுற்றிச் சுற்றி வலம் வந்தனர். நிறைய புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

    விராட், அனுஷ்கா தம்பதி லண்டனில் செட்டில் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தங்களது 2 குழந்தைகளுடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்கள் லண்டனில் எடுக்கப்பட்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வைரலான படங்களில், விராட் மற்றும் அனுஷ்கா கேமராவுக்காக தங்கள் புன்னகையை பளிச்சிடுவதைக் காணலாம். அவர்கள் சாதாரண உடையில் காணப்படுகின்றனர்.

    இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த படத்தில், அனுஷ்கா பூக்கள் டிசைன் போட்ட மேக்சி உடையில் காணப்படுகிறார். விராட் கிளாசிக் வெள்ளை டி-சர்ட், பழுப்பு நிற கால்சட்டையுடன் தொப்பி அணிந்து சாதாரணமாக காணப்படுகிறார். மற்றொரு படத்தில் கிரிக்கெட் வீரர் அனுஷ்காவின் தோள்களில் கை வைத்தபடி சிரிப்புடன் காணப்படுகிறார்.

    இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    • பார்படாஸில் ஏற்பட்ட ‘பெரில்’ புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள்.

    இந்திய வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் சமூக வலைத்தளத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பார்படாஸில் ஏற்பட்ட 'பெரில்' புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது புயலால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் பயங்கர சூறாவளி காற்றை வீடியோ கால் மூலம் தனது மனைவி அனுஷ்காவுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் விராட் கோலியின் வீடியோ வைரலானது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.

    • புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
    • நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்கு அவர்கள் சூட்டிய பெயரை அறிக்கை வாயிலாக அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி, இந்த நேரத்தில் தங்களுக்கு தனிமை அவசியம் என்றும் பொது வெளியில் தங்களது குழந்தைகளை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    இந்த நிலையில், தங்களது கோரிக்கைய ஏற்று தனியுரிமையை பாதுகாத்ததற்காக புகைப்பட கலைஞர்களுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி இந்தியாவில் இருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுக்கு விமான நிலையத்தில் வைத்து புகைப்பட கலைஞர்கள் விராட் கோலியிடம் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த விராட் கோலி அவை தனது மனைவியின் ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்து 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. புள்ளிகளில் சம அளவில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். விராட் கோலியும் உற்சாகத்தில் இருந்தார். அவர் முகத்தில் புன்னகையுடன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது. கோலி மட்டுமல்ல, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது கணவரின் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதைக் கண்டு மிகுந்த உணர்ச்சிவசத்தில் இருந்தார்.

    இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் இந்த மைதானத்தில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    விராட் கோலி 33 ரன்னை தொட்டபோது ஒட்டுமொத்த டி20 போட்டியில் இந்திய மண்ணில் 9,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய மண்ணில் விராட் கோலி மொத்தம் 268 டி20 போட்டிகளில் ஆடி 9,014 ரன்கள் எடுத்துள்ளார்.


    • விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் இந்த தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி விராட் கோலி தனது இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "என் வாழ்க்கையில் உன்னை கண்டறியாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையையே மொத்தமாக தொலைத்திருப்பேன். எங்கள் வாழ்வின் ஒளி நீ.

    நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்!"

    என்று தெரிவித்துள்ளார்.

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

    உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விராட் கோலி மற்றும் அனுஷ்க சர்மா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்தது.
    • அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மகள் வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 20-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க அனுஷ்கா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்த கோலி பின்னர் 2 டெஸ்ட்டில் இருந்து விலகினார்.
    • கோலி டெஸ்ட்டில் விளையாடததற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலில் இடம் பிடித்தார். பின்னர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேள்விக்கு விராட் கோலியின் நண்பரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். அதில், விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்தார்.

    இதனால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கூட சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • விழாவில் பங்கேற்க முக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான சச்சின் டெண்டூல்கருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனைதொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தோனியையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் தோனி இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட் வீரர் விராட் கோலி-க்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோலி கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    • சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் டோனிக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

     

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார்.
    • விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.


    உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.



    அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    ×