என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anushka sharma"

    • இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஜோகோவிச் அபாரமாக விளைாயடி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்களுக்கு ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீரரான ஜோகோவிச், 11ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் டி மினார்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை மினார் 6-1 என எளிதாக வென்றார். பின்னர் ஜோகோவிச் அபாரமாக விளைாயடினார். இதனால் அடுத்த 3 செட்களையும் 6-4 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் - அலெக்ஸ் டி மினார் மோதிய போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.

    விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார்

    • உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.

    • உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள்.
    • கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வுக்கு அவரது மனைவியும் சினிமா நடிகையுமான அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.

    ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும், கூடுதல் அடக்கம், ஞானத்துடன் திரும்ப வந்தீர்கள்.. இந்தப் பயணத்தை அருகே இருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை என உருக்கமாக பேசியுள்ளார்.

    • நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் அவர்," என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை நாங்கள் தினமும் அதிகமாக நேசிக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.." என குறிப்பிட்டிருந்தார்.

    • கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறையை சிலர் படம் பிடித்து வீடியோ வெளியிட்டனர்.
    • இதனை கண்டிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார். மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.


    அனுஷ்கா ஷர்மா பதிவு

    விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு கண்டன குரல் எழுப்பியுள்ளார்.

    • தனது அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
    • தற்போது பூமா இந்தியா நிறுவனத்துடன் அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார்.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா இந்தியா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது பூமா நிறுவனத்துடன் நடிகை அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



    • விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
    • அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

    தம்பதிகள் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டனர்.


    விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் பங்கேற்று பின்னர் பண்டாரா (மத விருந்து) ஏற்பாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது.

    விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் விருந்தாவனத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆசி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஆஸ்திரேலியா அணி சில நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 என்று பிரபலமாக அறியப்படும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிப்பதில் இன்றியமையாததாக இருக்கும்.

    தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 17-ம் தேதி மும்பையிலும் தொடங்குகிறது.

    • மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.

    ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.


    இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

    நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

    • விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது கோலியின் கால் சுளுக்கியது போல ஓடினார். அதனை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். போட்டி இல்லாத நேரங்களில் மனைவியுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது, ரெஸ்டாரண்டிற்கு செல்வது, கடகறைக்கு செல்வது என்று மனைவிக்கு என்று நேரம் செலவிட்டு வருவார்.

    இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு விராட் கோலி டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தடித்த, மெல்லிய மற்றும் உங்கள் அழகான பைத்தியக்காரத்தனத்தின் மூலம் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய எல்லாமுமான உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா.
    • இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் ஆவார்.

    இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், "பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.


    பைக்கில் பயணம் செய்த அமிதாப் பச்சன்

    இந்த பதிவை வைரலாக்கிய நெட்டிசன்கள் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.


    பைக்கில் பயணம் செய்த அனுஷ்கா ஷர்மா

    இந்நிலையில், அமிதாப் பச்சனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, "அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×