என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open"

    • இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
    • ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.

    ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.

    அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.

    சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.

    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
    • அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்தார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டுகளித்தார்.

    ஒரே சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் (38) என ஜோக்கோவிச் சாதனை படைத்ததை கண்டு தோனி மகிழ்ச்சிடைந்தார். 

    • அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • மகள் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் ஆட்டம் போட்டார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

    முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை முடிவடைந்தது. ஜோகோவிச்சின் மகள் தாராவின் பிறந்த நாள் இன்று. மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி பெற்ற கையோடு டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடினார். இது அங்கிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
    • ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.

    • அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

     முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • சிறுவனுக்கு வீரர் வழங்கிய தொப்பியை பறித்த சிஇஓ.
    • சமூக வலைத்தளத்தில் விமர்சன கருத்துகள் எழுந்ததால் வினோத விளக்கம்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் விளையாடிய ஆட்டத்தை, போலந்து நாட்டின் ட்ரோக்ப்ருக் நிறுவனத்தின் சிஇஓ பியோட்ர் ஸ்செரேக் உள்பட பலர் பார்த்து ரசித்தனர்.

    போட்டியில் கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் வெற்றி பெற்றதும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார். அப்போது தான் அணிந்திருந்த தொப்பியில் சிறுவன் ஒருவனுக்கு வீரர் தன்னுடைய கையெழுத்திட்டு வழங்குவார். சிறுவன் தொப்பியை பெறுவதற்குள் அருகில் நிற்கும் ஸ்செரேக் அதை பறித்து விடுவார். அத்துடன், அருகில் இருக்கும் தன்னுடைய பார்ட்னரின் பையில் வைத்து விடுவார்.

    அந்த சிறுவன் ஏக்கத்துடன் தொப்பி பறிபோனதை பார்ப்பான். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு நிறுவனத்தின் சிஇஓ இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என நெட்டிசன்கன் அவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.

    இந்த நிலையில் ஸ்செரேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தொபியை வைத்து உலகளாவிய மோசடியை உருவாக்க வேண்டாம். ஆட்சேபைனக்குரிய வகையில் கருத்து பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடுப்பேன்" எனக் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.

    2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.

    3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.

    தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.

    • ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ், பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான மெத்வதேவ் (ரஷியா) இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி 6-3, 7-5, 6-7, (5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதெவை போராடி வீழ்த்தினார்.

    தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.
    • 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.

    சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
    • கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
    • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.

    இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×