என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI Cricket"

    • ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும்.
    • விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயம் சோதனைகளையும் சந்தித்துள்ளது.

    அதன்படி கோலி- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்றின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர்- தினேஷ் கார்த்திக் இணை 2-வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    விராட் கோலி 33 முறை 150 ரன்களுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு பங்களித்துள்ளார். அதிக தடவை 150 ரன்னுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு உதவியதில் அவர் டெண்டுல்கரை (32 முறை) முந்தியுள்ளார்.

    ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது முறையாகும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இச்சாதனையில் அவரை நெருங்க கூட ஆளில்லை. அவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார்.

    ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி சேர்த்து) விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் தொடருகிறார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிவேக சதமாக இது பதிவானது. 2011-ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் யூசுப் பதான் 68 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இருந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாசில் ஜெயிக்கவில்லை. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் டாசை இழந்துள்ளது. விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச சேசிங்காக ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் சதம் அடித்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 105 ரன்னும் விராட் கோலி 102 ரன்னும் கே.எல்.ராகுல் 66 ரன்னும் அடித்தனர்.

    இதையடுத்து 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் 98 பந்துகளில் 110 ரன்கள் விளாசி அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பவுமா 46 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ப்ரீட்ஸ்கி 68 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய போஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

    49.2ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார். 

    38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது. 

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

    இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.

    இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் தோற்றது.
    • 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 20-வது முறை டாஸ் தோற்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது. அன்று முதல் தற்போது வரை இந்திய அணி டாஸ் தோல்வி தொடர்ந்து வருகிறது. கடைசியாக 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.

    தென்ஆப்பிரிக்கா:

    எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

    அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.

    மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.
    • காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அந்த தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் அந்த தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

    காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    வெலிங்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.

    அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    வெலிங்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.

    அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த 2-வது போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் அவர் 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 16-ந் தேதி நடக்கிறது.
    • இந்த ஒருநாள் தொடருக்கான ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 3-1 (ஒரு ஆட்டம் மழையால் பாதிப்பு) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் இந்த தொடரில் இடம் அளிக்கவில்லை.

    அவருக்கு பதிலாக ஜான் ஜம்பல் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரரான இவர் 6 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

     நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:-

    ஷாய் ஹோப் (கேபடன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஜோஹன் லெய்ன், காரி பியர், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

    ×